ஏட்டிக்குபோட்டி போஸ்டர் யுத்தம் நடத்தும் ஓபிஎஸ்-ஈபிஎஸ் அணியினர்..!

எடப்பாடி பழனிச்சாமியை கண்டித்து ஓ பன்னீர்செல்வம் தரப்பினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர் எடப்பாடி பழனிச்சாமியை பல கோணங்களில் சித்தரித்து சிவகங்கை பகுதியில் போஸ்டர்களும் ஒட்டப்பட்டுள்ளதால் பரபரப்பு

சிவகங்கையில் இன்று மாலை நடைபெறும் மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் பிறந்தநாள் விழா பொதுக்கூட்டத்திற்கு அதிமுகவின் இடைக்கால பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி வருகை தர உள்ள நிலையில் சிவகங்கை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே ஓ. பன்னீர்செல்வம் தரப்பினர் எடப்பாடி பழனிச்சாமி வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்தும் எம்ஜிஆர் மற்றும் ஜெயலலிதா கொண்டு வந்த அதிமுகவின் அடிப்படை சட்ட விதிகளை புறம் தள்ளி கட்சியை எடப்பாடி பழனிச்சாமி அபகரிக்க முயல்வதாகவும் 

அதனால் கட்சியை விட்டு எடப்பாடி பழனிச்சாமி வெளியேற வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி 300க்கும் மேற்பட்டோர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடு வருகின்றனர். இதனால் ஆர்ப்பாட்டம் நடைபெறும் பகுதியில் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். மேலும் ஓ பன்னீர்செல்வம் தரப்பினர் எடப்பாடி பழனிச்சாமி பல கோணங்களில் சித்தரித்தும் விமர்சித்தும் சிவகங்கை பகுதியில் போஸ்டர்களும் ஒட்டியுள்ளனர்.

அதே நேரத்தில் மாலை அதிமுக எடப்பாடி பழனிச்சாமி தரப்பினர் சார்பில் ஜெயலலிதா பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் திருப்பத்தூர் மானாமதுரை சாலையில் நடைபெற உள்ள நிலையில் முன்னேற்பாடு பணிகளில் எடப்பாடி பழனிச்சாமி தரப்பினர் முழு வீச்சில் ஈடுபட்டு வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *