‘ஈபிஎஸ் துரோகத்தில் ஊறிக்கிடக்கிற நச்சுப் பாம்பு…’ ஓபிஎஸ் அணி மருது அழகுராஜ் காட்டம்

எடப்பாடி பழனிச்சாமியை பொருத்தவரை துரோகத்தில் ஊரி கிடைக்கிற நச்சுப் பாம்பு. நச்சு பாம்பின் தகுதி தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலைக்கும் புரிந்துள்ளது என்று நாங்கள் நம்புகிறோம்… சிவகங்கையில் ஓபிஎஸ் தரப்பு அதிமுக கொள்கை பரப்புச் செயலாளர் மருது அழகுராஜ்

எடப்பாடி பழனிச்சாமி செல்லும் இடங்களை எல்லாம் ஒரே கூட்டத்தை கூட்டி செல்கிறார், மதுரை விமான நிலையத்திற்கு வந்திரங்கிய எடப்பாடி பழனிச்சாமிக்கு எதிராக சிவகங்கை மாவட்டத்தைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் முழக்கம் எழுப்பி எதிர்ப்பை வெளிப்படுத்தியுள்ளார், இது எடப்பாடி பழனிச்சாமிக்கு எதிராக மக்கள் புரட்சி ஏற்பட்டு அதிமுகவை விட்டு வெளியேறு என்ற முழக்கங்கள் வழுத்து வருகிறது, எடப்பாடி பழனிச்சாமி செல்லும் இடமெல்லாம் இன்று சிவகங்கையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டம் போல் அனைத்து இடங்களிலும் ஆர்ப்பாட்டம் தொடரும், அவர் அதிமுகவிலிருந்து தானாக முன்வந்து வெளியேற வேண்டும், காசுக்காக சேர்ந்த கூட்டத்தை வைத்துக்கொண்டு கட்சியை அபகரிக்க முயற்சி செய்து வருகிறார் அது ஒருபோதும் நடக்காது,  

இன்று இங்கு வந்துள்ள கூட்டம் குன்றக்குடி கோவிலுக்கு சென்று காசை வெட்டிப்போட்டு செல்வோம், எடப்பாடி பழனிச்சாமி ஜெயலலிதா வீட்டை கொள்ளையடித்தவர், ஆட்சிக்கு வந்தவுடன் கைது நடவடிக்கை மேற்கொள்வோம் என்று திமுக கூறியது ஆனால் இதுவரை எடப்பாடி பழனிச்சாமி மீது ஒரு வழக்கு கூட பதிவு செய்யப்படவில்லை, திமுக எடப்பாடி பழனிச்சாமி வைத்துக்கொண்டு அதிமுகவை பிளவுக்குள் வைத்துக் கொண்டு எடப்பாடி பழனிச்சாமியை பிணை கைதியாக வைத்துள்ளது என்ற சந்தேகம் தொண்டர்களுக்கு வந்துள்ளது. எடப்பாடியே கட்சியை விட்டு நீங்கும் வரை இந்த போராட்டம் தொடரும்.

பாத்திரம் அறிந்து பிச்சை போடுவதை போல் பதவி யாருக்கு கொடுக்க வேண்டுமோ அவர்களுக்கு கொடுக்க வேண்டும், தமிழ்நாடு முதலமைச்சர் பதவியை கொடுத்த சசிகலாவையே எடப்பாடி பழனிச்சாமி கடுமையாக விமர்சித்தார். ஆர் கே நகரில் தினகரனை அண்ணன் அண்ணன்  என்று கூறிவிட்டு காரியம் முடிந்தவுடன் அவருக்கும் கட்சிக்கும் என்ன சம்பந்தம் என்று எடப்பாடி பழனிச்சாமி கேட்டார். நான்கரை ஆண்டுகளாக ஆட்சி நடத்துவதற்கு ஓபிஎஸ்ஐ அண்ணன் நல்லவர் என்று கூறிவிட்டு காலை சுற்றி வந்து அன்றாடும் சரணாகதி நடத்திவிட்டு ஆட்சி நடத்தி முடித்தவுடன் ஓபிஎஸ்ஐ ஒழிக என்று கூறுகிறார். 

இப்படிப்பட்ட நன்றி கெட்ட மனிதருக்கு நல்லது செய்யப் போன வரிசையில் அண்ணாமலையும் சேர்ந்துள்ளார். இத்தனை பேருக்கு துரோகம் செய்தவர் தனக்கும் செய்ய மாட்டாரா என்று நினைத்து விட்டார் போல. ஒருவேளை தன் இனத்தைச் சார்ந்தவர் நமக்கு உண்மையாக இருந்து விட மாட்டாரா என்று எண்ணினார் . துரோகத்திற்கு இனம் கிடையாது. 

துரோக புத்தி உள்ளவர் பெத்த பிள்ளைக்கும் கட்டிய மனைவிக்கும் துரோகம் செய்வார்கள். எடப்பாடி பழனிச்சாமியை பொருத்தவரை துரோகத்தில் ஊரி கிடைக்கிற நச்சுப் பாம்பு. நச்சு பாம்பின் தகுதி அண்ணாமலைக்கும் புரிந்துள்ளது என்று நாங்கள் நம்புகிறோம்…‌ சிவகங்கையில் எடப்பாடி பழனிச்சாமியை கண்டித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட ஓபிஎஸ் தரப்பு அதிமுக கொள்கை பரப்பு செயலாளர் மருது அழகுராஜ்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *