மக்களை தேடி மனுக்கள் பெறுதல்…  அமைச்சர் எ.வ.வேலு துவங்கி வைத்தார்…

தமிழகத்தில் முதல்முறையாக மக்களை தேடி மனுக்கள் பெறுதல் முகம் ரிஷிவந்தியம் சட்டமன்ற தொகுதியில் அமைச்சர் துவங்கி வைத்தார்

இல்லம் தேடி கல்வி, மக்களை தேடி மருத்துவம் என்ற அடிப்படையில் தமிழகத்திலேயே முதல்முறையாக ரிஷிவந்தியம் சட்டமன்ற தொகுதியில் மக்களைத் தேடி மனுக்கள் பெறுதல் முகாம் நடைபெற்றது. கள்ளக்குறிச்சி மாவட்டம் ரிஷிவந்தியம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட முருக்கம்பாடி, சித்தப்பட்டினம், திருவரங்கம், ஜம்படை, சீர்பனந்தல் மற்றும் சிறுபனையூர் ஆகிய ஊராட்சிகளில் அமைச்சர் எ.வ.வேலு திட்டத்தினை துவங்கி வைத்தார்.  

இந்த முகாமில் வருவாய்த்துறை, ஊரக வளர்ச்சித்துறை, வேளாண்மை துறை, மின்சாரத்துறை, மகளிர் மற்றும் மாற்றுத்திறனாளி நலத்துறை, வங்கி சம்பந்தமாக கடன் பெறுதல் உள்ளிட்ட 12 துறைகளில் 700க்கும் மேற்பட்ட பயனாளிகளுக்கு ஒரு கோடி ரூபாய்க்கும் அதிகமான நலத்திட்ட பணிகளை இன்று அமைச்சர் எ.வ.வேலு  வழங்கி துவங்கி வைத்தார். 

ஆறு ஊராட்சிகளிலும் பொதுமக்கள் தங்களது தேவைகளை மனுக்களாக அமைச்சரிடம் வழங்கினார்கள். இந்த மனுக்கள் மீது இம்மாத இறுதிக்குள் நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டது,

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *