எடப்பாடியே ராஜினாமா செய்… சேலத்தில் ஒட்டிய போஸ்டரால் பரபரப்பு

அதிமுக ஓபிஎஸ் அணியினர்  11-ம் தேதி சனிக்கிழமை காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை சிவகங்கை அரண்மனை வாசலில் உண்ணாவிரதம் மற்றும் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்த காவல் துறையினரிடம் அனுமதி கேட்டுருந்தனர் இந்நிலையில் சிவகங்கை நகர் முழுவதும் இரு அணியினரும் போஸ்டர் ஒட்டியதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது 

ஓபிஎஸ் அணியினர் அடித்த போஸ்டரில் தொடர் தோல்விகளால் அதிமுகவை அளித்துக் கொண்டிருக்கும் எட்டு தோல்வி எடப்பாடியாரே சிவகங்கை மண்ணிற்கு வராதே என்று ஒரு போஸ்டரும் , 67ஆயிரம் வாக்கு வித்தியாசத்தில் எடப்பாடி பழனிச்சாமியின் வரலாறு காணாத படுதோல்வி அடைந்ததையும் 

எம்ஜிஆர் ஜெயலலிதாவால் கட்டிக் காக்கப்பட்ட கட்சியை அபகரிக்க துடிதுடிக்கும் எடப்பாடி பழனிச்சாமி வன்மையாக கண்டிப்பதாகவும் ஜெயலலிதா பிறந்தநாள் கொண்டாடுவது உங்களுக்கு தேவைதானா? ஏமாற்றாதே ஏமாற்றாதே சிவகங்கை மாணவர்களுக்குள் வந்து ஏமாற்றாதே என்று போஸ்டர் ஒன்றையும்  நகர் முழுவதும் ஒட்டப்பட்டுள்ளதால் அதிமுக வட்டாரத்தில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

இதனை அடுத்து ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் தோல்விக்கு பொறுப்பேற்று எடப்பாடி பழனிச்சாமி அதிமுகவிலிருந்து ராஜினாமா செய்ய வேண்டும் என சேலத்தில் பழைய பேருந்து நிலையம்,  புதிய பேருந்து நிலையம், சாரதா கல்லூரி சாலை,  ஓமலூர் நெடுஞ்சாலை ஆகிய பகுதிகளில் எடப்பாடி பழனிச்சாமிக்கு எதிராக போஸ்டர் ஒட்டப்பட்டுள்ளதால் பரபரப்பு…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *