புதுச்சேரியில் கலைஞருக்கு சிலை… முதல்வரிடம் கோரிக்கை

தமிழக முதல்வர் கருணாநிதிக்கு சிலை: முதல்வர் ரங்கசாமியிடம், திமுக எம்எல்ஏக்கள் மனு- சட்டபேரவையின் பேசுங்கள், உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று ரங்கசாமி உறுதி மறைந்த தமிழக முதல்வர் கருணாநிதிக்கு அரசு சார்பில், புதுச்சேரியில் திருவுருவச்சிலை அமைக்க வேண்டும் என எதிர்கட்சி தலைவர் சிவா தலைமையில் திமுக எம்எல்ஏக்கள் அனிபால் கென்னடி, சம்பத், செந்தில்குமார், காங்கிரஸ் எம்எல்ஏக்கள் வைத்தியநாதன், ரமேஷ் ஆகியோர் கூட்டாக இணைந்து சட்டபேரவை அலுவலகத்தில் முதலமைச்சர் ரங்கசாமியிடம் மனு அளித்தனர். 

பாரதி பூங்கா, குபேர் சிலை அருகில், காமராஜர் சாலை உள்பட 5 இடங்களில் சிலை அமைக்க அந்த மனுவில் குறிப்பிட்டுள்ளனர். இது தொடர்பாக சட்டபேரவையின் உரையாற்றுங்கள். இதையடுத்து சிலை அமைக்க உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று முதல்வர் ரங்கசாமி உறுதி அளித்தார்.

பின்பு செய்தியாளர்களை சந்தித்த எதிர்கட்சி தலைவர் சிவா, கழக தலைவர் கலைஞருடைய அருமை, அவருடைய திறமை முதல்வர் ரங்கசாமிக்கு நன்றாக தெரிகிறது.  அவரும் வைக்கப்படும் என தெரிவித்தார். கூட்டணி கட்சி நெருக்கடி காரணமாக, வைக்கவில்லையென்றால், எங்களுக்கும் காலம் வரும் அப்போது நாங்கள் வைப்போம் என்றார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *