காய்ச்சல் வந்தால்……கம்முனு 3 நாள் வீட்டுல இருக்கணும்….அமைச்சர் மா.சு அசத்தல் அட்வைஸ்
வெங்கட்ராம்
தமிழகம் முழுவதும் H3N2 வைரஸ் காய்ச்சல் வேகமாக பரவிக் கொண்டு வருகிறது. சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் அந்த காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளனர். அரசு மருத்துவமனைகளும் தனியார் மருத்துவமனைகளும் இந்த காய்ச்சலின் காரணத்தால் நிரம்பி வழிந்து கொண்டிருக்கிறது. இந்த காய்ச்சலுக்கு சாதாரண ஆண்டிபயாட்டிக் மருந்துகள் முழுவதுமாக வேலை செய்யாது என்று மருத்துவ கவுன்சில் கூறியுள்ளது. ஆகையால் பொதுமக்கள் அனைவரும் அந்தச் செய்தியை படித்துவிட்டு ஒரு வித அச்சத்தோடு இருக்கின்றனர். அந்த அச்சத்தை போக்கும் வகையில் பல்வேறு மருத்துவ நிபுணர்களும் தங்கள் கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் மாண்புமிகு அமைச்சர் மா. சுப்ரமணியம் செய்தியாளர்களை சந்தித்துள்ளார். “H3N2 வைரஸ் ஆல் பாதிக்கப்பட்டவர்கள் 3 நாட்கள் வீட்டில் தங்கினாலே போதுமானது. வெளியில் செல்வதை தவிர்த்து நன்றாக ஓய்வெடுக்க வேண்டும்” என்று அறிவுறுத்தியுள்ளார்.
பொதுமக்களும் இதனை கடைபிடித்து தேவையில்லாத அச்சத்தை அகற்றி அறிவுரையை கடைபிடிக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறோம்.