அரசு அலுவலகத்தில் முதல்வர் படத்தை அகற்றிவிட்டு ஈபிஎஸ் போட்டோவை  வைத்ததால் பதற்றம்

திருத்தணி ஒன்றிய குழு பெருந்தலைவர் திமுகவிலிருந்து விலகி அதிமுகவில் இணைந்த நிலையில் அலுவலகத்திற்கு வந்த அவர் முதல்வர் முக ஸ்டாலின் படத்தை அகற்றிவிட்டு எடப்பாடி பழனிச்சாமி போட்டோவை வைத்ததால் திமுகவினர் அதிர்ச்சி

திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி ஒன்றிய குழு பெருந்தலைவராக இருப்பவர் தங்கதனம். திமுக பொறுப்பேற்ற பிறகு அதிமுகவில் இருந்து விலகி திமுகவில் இணைந்த இவர் தற்போது திமுகவிலிருந்து விலகி நேற்று முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் அதிமுகவில் தன்னை இணைத்துக் கொண்டார். இன்று ஒன்றிய அலுவலகத்திற்கு வருகை தந்த பெருந்தலைவர் தங்கதனம் அலுவலகத்தில் இருந்த 

தமிழ்நாடு முதலமைச்சர் மு க ஸ்டாலின் படத்தை அகற்றி டேபிள் கீழே வைத்துவிட்டு எடப்பாடி பழனிச்சாமி போட்டோவை அரங்கில் மாட்டியதால் திமுகவினர் அதிர்ச்சி அடைந்தனர். தற்போதைய முதல்வராக இருக்கும் புகைப்படத்தை அகற்றியது தற்போது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *