மேலே இருக்கிறவன் பாத்துக்குவான்… அண்ணாமலையை எச்சரிக்கும் முன்னாள் அமைச்சர்…!
கோவில்பட்டியில் அதிமுக முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜூ, தமிழகத்தில் என்றுமே அதிமுக, திமுகவின் தலைமையின் கீழ் தான் கூட்டணி இருக்கும் பாஜக தலைவர் அண்ணாமலை தலைவராக இருக்கும் வரை பாஜக கூடாரம் காலி ஆகிவிடும் பாஜக தலைவர் அண்ணாமலை பேச்சை தேசிய தலைவர் நட்டா, பிரதமர் மோடி பார்த்துக் கொண்டிருக்கின்றனர் அவர்கள் முடிவு எடுப்பார்
பாஜகவில் அண்ணாமலை நிரந்தரம் இல்லை நாளைக்கு உண்ணாமலை கூட வரலாம் பாஜகவின் ஐடி நிர்மல் குமார் அண்ணாமலையின் ரகசியத்தை வெளியிடுவேன் என்ற பயத்தில் பேசி வருகிறார் என்று நினைக்கிறேன் இதுகுறித்து அண்ணாமலை தான் விளக்கம் அளிக்க வேண்டும்
முன்னதாக கடம்பூர் ராஜூ தலைமையில் அதிமுக நிர்வாகி கூட்டம் நடைபெற்றது இந்த கூட்டத்தில் எடப்பாடி பழனிசாமி உருவப்படத்தை எரித்த பாஜக நிர்வாகிகள் மீது வழக்கு பதிவு செய்ய வேண்டும் என கோரிக்கை விடுத்தனர் மேலும் கோவில்பட்டி பாஜக நிர்வாகி ஒருவர் கடம்பூர் ராஜூ முன்னிலையில் இணைந்தார்