ஈபிஎஸ் உருவப்படத்தை யாரும் எரிக்க வேண்டாம்…! அண்ணாமலை அறிவுரை

Annamalai

பாஜகவினர் உணர்ச்சிவசப்பட வேண்டாம். கூட்டணி கட்சி தலைவர்களுக்கு வழங்க வேண்டிய மரியாதையை வழங்க வேண்டும் எடப்பாடி பழனிச்சாமி உருவப்படம் எரிப்பில் ஈடுபட்ட தொண்டர்களுக்கு அண்ணாமலை அறிவுரை. 

தேனி மாவட்டம் பெரியகுளம் தென்கரையில் உள்ள  ஓபிஎஸ்-ன் இல்லத்திற்கு வந்த தமிழக பாரதிய ஜனதா கட்சி தலைவர் அண்ணாமலை ஓபிஎஸ்-ன் தாயார் உருவப்படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தி அஞ்சலி செலுத்தியதோடு ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அவரது சகோதரர் ஓ ராஜா ஆகியோருக்கு ஆறுதல் தெரிவித்தார்.

பின்  செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அண்ணாமலை கூறுகையில், கடந்த ஆண்டு ஓ.பி.எஸ்-ன் மனைவி உயிரிழப்பு மற்றும் இந்த ஆண்டு அவரது தாயார் உயிரிழப்பு என தொடர்ந்து முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்திற்கு இழப்பு ஏற்படுகிறது.‌ அவர்களை இழந்து வாடும் ஓ.பி.எஸ்-க்கு எனது ஆறுதல் தெரிவித்ததற்காக கூறினார்.

கோவில்பட்டியில் எடப்பாடி பழனிச்சாமி உருவப்படத்தை பாஜகவினர் எரித்தது குறித்த கேள்விக்கு பதிலளித்த அவர், கூட்டணி கட்சித் தலைவர்களுக்கு  பாஜகவினர் தார்மீக அடிப்படையில் தகுந்த மரியாதை வழங்கப்பட வேண்டும். கட்சி நிர்வாகிகள் உணர்ச்சிவசப்படக் கூடாது. பாஜக தொண்டர்கள் கொள்கை மற்றும் கோட்பாடுகளை மீறி செயல்படக் கூடாது என்றார். வெளி மாநில தொழிலாளர்கள் குறித்து கேட்டதற்கு .

வடமாநிலத்தவர்களுக்கு தமிழக மக்களும் பாஜக வினரும் ஆதரவாக உள்ளார் என இந்திய அளவில் நான் பேசி வருகிறேன். தங்கள் மீது வழிக்கு பதியப்பட்டுள்ளதை எப்படி எதிர்கொள்வீர்கள் என்ற கேள்விக்கு பதில் அளித்த அவர் பிரசாந்த் கிஷோரும் நான் கூறிய அதே கருத்தைதான் டிவிட்டர் வாயிலாக தெரிவித்திருந்தார். அப்படி என்றால் அவர் மீதும் வழக்குத் தொடுப்பார்களா என கேள்வி எழுப்பினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *