வேவு பாக்குறதெல்லாம் ஒரு பொழப்பா…..ஒரு மனநோயாளி கிட்ட மாட்டிகிட்டேன்……பாஜகவில் இருந்து விலகிய திலீப் ட்விட்….

வெங்கட்ராம்.

மெட்ராஸ் படத்தில் ஒரு வசனம் வரும். இந்த செவுரு எத்தனை பேரை காவு வாங்க போகுதோ என்று, இதே வார்த்தையை பயன்படுத்தி இப்போது சொந்தக் கட்சியினரே அண்ணாமலையை விமர்சிக்க தொடங்கிவிட்டனர். கே.டி ராகவன், காயத்ரி ரகுராம், திருச்சி சூர்யா, CTR நிர்மல் குமார், தற்போது பாஜகவின் மாநில செயலாளராக இருந்த திலீப். தன் ஆழ் மனதில் இருக்கும் அனைத்தையும் ஒரு ட்வீட் மூலம் வெளிப்படுத்தி உள்ளார். வார் ரூமில் வக்கிரங்களை தாங்க முடியாமல், வரிந்து கட்டிக்கொண்டு ராஜினாமா செய்துள்ளார். இப்படி தமிழ்நாட்டில் கட்சி இருக்கும் நிலைமை தெரிந்தும் கட்சிக்காக உழைத்தவர்கள் அனைவரும் வெளியேறி கொண்டு இருந்தால் கட்சியின் எதிர்காலம் என்ன ஆகும் என்பதே கட்சிக்காக உண்மையாக உழைக்கும் தொண்டர்களின் எண்ணமாக இருக்கிறது. கட்சியின் முக்கிய தலைவர்கள் தொடர்ந்து ராஜினாமா செய்வதை தலைமை கவனிக்குமா. தமிழிசை அவர்கள் இருக்கும் போது கட்சியின் தலைமையை நம்பிக்கையுடன் பார்த்த தொண்டர்கள் மீண்டும் அதே போன்று நம்பிக்கையை பெறுவார்களா?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *