வெறும் கையில் கம்பு சுற்றினாரா நெடுமாறன்…
– வெங்கட்ராம்
நெடுமாறன்… தமிழ் தேசியத்தின் பெரும் தலைவர்களில் ஒருவராக மதிக்கப்படுபவர். சமீபத்தில் அவர் கொடுத்த ஒரு பேட்டி இண்டன்பக் அறிக்கை, பிபிசி காணொளி போன்ற பல விஷயங்களைத் தாண்டி சர்வதேச அளவில் கவனம் பெற்றது. ஆம், நீங்கள் நினைப்பது சரிதான். பிரபாகரன் உயிரோடு இருக்கிறார் என்பதுதான் அந்த அறிவிப்பு.
பிரபாகரன் குடும்பத்திடம் அனுமதி வாங்கிய பின்பு தான் இந்தச் செய்தியை வெளியிடுகிறேன் என்று கூறினார். பிரபாகரனோடு களத்தில் கடைசி நாள் வரை சண்டையிட்ட பல முன்னாள் விடுதலைப் புலிகளே இதை மறுத்தனர். இலங்கை ராணுவமும் மறுத்தது. பிரபாகரனுக்கு உயிரோடு இருக்கிறார் என்பதை கூட நம்பாத பல தலைவர்கள் நெடுமாறன் கூறினார் என்ற ஒரு காரணத்திற்காகவே, குறைந்தது ஒரு ஆதாரத்தையாவது காட்டுங்கள் என்று கேட்டார்கள்.
ஆனால் ஆதாரம் மட்டும் வரவே இல்லை. இன்று அளித்த பேட்டியில் நெடுமாறன், ஆதாரம் கிடைக்கும்போது வெளியிடுவேன் என்று கூறி இருக்கிறார். அப்போது இவ்வளவு நாள் ஆதாரம் இல்லாமல் தான் பேசிக் கொண்டிருந்தாரா என்ற கேள்வி எழுகிறது. போனது போகட்டும் சமர்ப்பிக்கும் ஆதாரம் அவரது பேச்சை உண்மையாக்கினால் அனைவருக்கும் மகிழ்ச்சியே.