இடைத்தேர்தல் எப்படி?… நிரூபிப்பாரா எடப்பாடி!

-வெங்கட்ராம்

பெரிதும் எதிர்பார்த்த ஈரோடு கிழக்கின் இடைத்தேர்தல் முடிவு தற்போது வெளியாகி கொண்டிருக்கிறது. மத்த கட்சிகளைப் பொறுத்தவரை இது வழக்கமான இடைத்தேர்தலாக இருந்தாலும், அதிமுக கட்சியை பொறுத்தவரை இது அதரிபுதிரி இடைத்தேர்தலாக இருக்கிறது. பெரும் போராட்டத்திற்குப் பிறகு கட்சியை தன் பக்கம் கொண்டு வந்த திரு எடப்பாடி பழனிச்சாமி அவர்கள், போர்க்களத்தில் தன் பலத்தை நிரூபிக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளார்.

ஏற்கனவே அவர் அதிமுக கட்சியை தன் பண பலத்தால் தன் பக்கம் இழுத்துள்ளார் என்ற குற்றச்சாட்டு அவர் மீது வைக்கப்படுகிறது. தன் கட்சியை சேர்ந்த மற்ற தலைவர்களுக்கு துரோகம் இழைத்து விட்டு இந்த பதவியை பிடித்திருக்கிறார் என்று அந்தக் கட்சியை விட்டு நீக்கப்பட்ட பல்வேறு தலைவர்கள் அவர் மீது குற்றச்சாட்டு வைத்திருக்கின்றனர்.

எப்படி செல்வி ஜெயலலிதா இருக்கும்போது எதிர்க்கட்சியாக இருந்தாலும் கணிசமான வாக்கை பெறுவாரோ, அதேபோல் இந்த ஈரோடு கிழக்கு இணைத்தேர்தலிலும் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் பெற்றாக வேண்டிய கட்டாயத்தில் உள்ளார். அதிமுக டெபாசிட் வாங்கினாலே அது எடப்பாடி பழனிச்சாமி அவர்களின் ஆளுமைக்கு கிடைத்த மிகப்பெரிய சான்றாக கருதப்படும். எந்த ஆட்சியிலும் ஆளுங்கட்சி மீது சிறிதளவு அதிருப்தி நிலவிக் கொண்டே இருக்கும் அந்த அதிர்த்தியை எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் அறுவடை செய்வாரா என்பதே அரசியல் வல்லுநர்கள் உற்று நோக்கிக் கொண்டிருக்கிறார்கள்.

எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் அதிமுகவிற்கு தலைமை ஏற்று இதுவரை எந்த ஒரு தேர்தலிலும் அதிமுக அபார வெற்றி அடையவில்லை. இந்த நிலையில் இந்த ஈரோடு கிழக்கின் இடைத்தேர்தல் முடிவு தான் அவருக்கு கிடைக்கப் போகும் வெற்றிச் சான்று.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *