ஓபிஎஸ் தாயார் மறைவிற்கு பாஜகவின் எச்.ராஜா மலர் தூவி அஞ்சலி…!

பாரதீய ஜனதா கட்சியின் தேசீய செயற்குழு உறுப்பினர் எச். ராஜா முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தின் தாயார் மறைவிற்கு நேரில் வந்து தாயாரின் திருவுருவப்படத்திற்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தி துக்கம் விசாரித்து ஆறுதல் தெரிவித்தார்.

தேனி மாவட்டம் பெரியகுளத்தில் உள்ள முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தின் தாயார் வயது மூப்பால் ஏற்பட்ட உடல்நல குறைவால் கடந்த சில தினங்களுக்கு முன் காலமானார். இந்நிலையில் கடந்த 4 தினங்களாக ஓ .பன்னீர் செல்வத்தின் தாயார் மறைவின் துக்க நிகழ்ச்சியில் கலந்து கொள்ளாத அரசியல் பிரமுகர்கள் நாள்தோறும் அவரது இல்லத்தில் வந்து துக்கம் விசாரித்து  ஆறுதல் தெரிவித்து செல்கின்றனர்.

இந்நிலையில் இன்று பாரதீய ஜனதா கட்சியின் தேசீய செயற்குழு உறுப்பினர் எச்.ராஜா மற்றும் தேனி மாவட்ட பாரதிய ஜனதா கட்சி நிர்வாகிகள் நேரில் வந்து பெரியகுளத்தில் முன்னாள் முதல்வர் பன்னீர்செல்வத்தின் இல்லத்தில் வைக்கப்பட்டிருந்த ஓபிஎஸ்ன் தாயார் பழனியம்மாள் திருவுருவப் படத்திற்கு மாலை அணிவித்து மலர் தூவி அஞ்சலி செலுத்தி தாயாரின் மறைவிற்கு ஓ. பன்னீர்செல்வம் மற்றும் அவரது குடும்ப உறுப்பினர்களுக்கு ஆறுதல் கூறி சென்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *