இந்தியாவில் எங்கு தேர்தல் நடந்தாலும் பாஜக வெற்றி பெறும்… அதற்கு கேஸ் விலையை குறைக்கனும்.. ஜி.கே.வாசன்

சமையல் எரிவாயு சிலிண்டர்கள் விலை  உயர்வை ஒன்றிய அரசு திரும்ப பெற வேண்டும் என கும்பகோணத்தில் செய்தியாளர்களிடம் பேசும்போது தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி தலைவர் ஜி கே வாசன்  தெரிவித்தார்.

கும்பகோணத்தில் உயிரிழந்த பட்டு கைத்தறி உற்பத்தியாளர் சங்க தலைவர் மற்றும்  ஒப்பிலியப்பன் கோவில் முன்னாள் அறங்காவலர் குழு தலைவர் ராயா. கோவிந்தராஜன் உடலுக்கு  அஞ்சலி செலுத்துவதற்காக கும்பகோணம் வந்திருந்த தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி தலைவர் ஜிகே வாசன் செய்தியாளர்களை சந்தித்தார். 

அப்போது ஈரோடு இடைத்தேர்தலில் பணநாயகம் வென்றுள்ளது என்றும், மத்திய அரசு சமீபத்தில் உயர்த்தி அறிவித்த சமையல் எரிவாயு சிலிண்டர் விலைகளை குறைக்க வேண்டும். விலை உயர்வினால்  பொதுமக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர் என்றும் வாசன் தெரிவித்தார். தமிழக மீனவர்கள் நலன் காக்க இந்திய அரசு உரிய நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் தமிழக மீனவர்கள் தாக்கப்படுவதை தடுக்க வேண்டும் என்றும், 

ஆஸ்திரேலியாவில் காவல்துறையினரால் சுடப்பட்ட  தமிழரின் உடல் சொந்த ஊருக்கு கொண்டு வர அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வாசன் தெரிவித்தார். பொதுவாக இந்தியாவில் எங்கு தேர்தல் நடந்தாலும் பாரதிய ஜனதா கட்சி வெற்றி பெறும் வகையில் நல்ல சூழல் உள்ளது என்றும் வாசன் தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *