ஆளுநர் தமிழ்நாட்டில் எங்கும் நடமாட முடியாது… கம்யூனிஸ்ட் கட்சி முத்தரசன் எச்சரிக்கை
ஆளுநர் தன் போக்கினை மாற்றி கொள்ளாவிட்டால் ஆளுநர் தமிழ்நாட்டில் எங்கும் நடமாட முடியாது
இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் முத்தரசன் திருவாரூரில் பேட்டி காரல் மார்க்ஸ் குறித்து அவதூறு பிரச்சாரம் செய்யும் ஆளுநர் ரவியை கண்டித்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் முத்தரசன் தலைமையில்
திருவாரூர் பழைய பேருந்து நிலையம் அருகே கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் 100க்கும் மேற்பட்ட இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர் கலந்து கொண்டார்கள் இந்த ஆர்ப்பாட்டத்திற்கு பிறகு முத்தரசன் செய்தியாளர்களை சந்தித்தார் அப்போது அவர் பேசியதாவது தமிழக ஆளுநர் ஆளுநர் மாளிகையை பாஜக அலுவலகமாக செயல்படுத்தி வருகிறார்.
அவர் சனாதான கொள்கைகளை பின்பற்றி தமிழகத்தை சீரழிக்க முயற்சிக்கிறார் என்றும் பேசினார் மேலும் ஆளுநர் தன்னுடைய போக்கை மாற்றிக் கொள்ளாவிட்டால் தமிழகத்தில் அவர் எங்கும் நடமாட முடியாது என கூறினார் மாமேதை காரல் மார்க்ஸ் குறித்து அவதூறு பிரச்சாரம் செய்த ஆளுநர் ரவியை வன்மையாக கண்டிப்பதாகவும் தொடர்ந்து இவ்வாறு ஆளுநர் பேசி வந்தால் தமிழகத்தில் எங்கும் நடமாட முடியாது என்றும்
தொடர்ந்து அவர் இது போல் பேசி வந்தால் அவர் நடமாட முடியாதபடி தமிழகத்தில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர் மாபெரும் அளவில் போராட்டத்தில் ஈடுபட போவதாகவும் தெரிவித்தார்