தென்னரசுவை ஆதரித்து இறுதிநாள் பிரச்சாரத்தில் ஈபிஎஸ்…!

ஈரோடு கிழக்கு தொகுதிக்கு உட்பட்ட மூளப்பட்டறையில் அதிமுக வேட்பாளர் தென்னரசுவை ஆதரித்து பிரச்சாரம் மேற்கொள்ள அதிமுகவின் இடைக்கால பொதுச் செயலாளரும் முன்னாள் முதலமைச்சருமான எடப்பாடி பழனிச்சாமி வருகை தருவதையொட்டி மேளதாளங்கள் முழங்க கையில் அக்கட்சியின் துண்டுகளை சுற்றி அதிமுகவினர் குத்தாட்டம் போட்டதை கூடியிருந்தவர்கள் கண்டு ரசித்தனர்

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிடும் தென்னரசுவிற்கு ஆதரவாக அதிமுகவின் இடைக்கால பொதுச் செயலாளரும் முன்னாள் முதலமைச்சருமான எடப்பாடி பழனிச்சாமி இன்று இறுதி கட்ட பரப்புரை மேற்கொண்டு வருகிறார். மாலை ஆறு மணிக்கு பிரச்சாரம் நிறைவடைய உள்ள நிலையில் எடப்பாடி பழனிச்சாமி அக்கரகாரம் கருங்கல்பாளையம் காந்தி சிலை உள்ளிட்ட பகுதிகளில் பரப்புரை மேற்கொள்ள உள்ளார்.

இந்நிலையில் எடப்பாடி பழனிச்சாமி பிரச்சாரம் செய்ய வருகை தருவதை ஒட்டி மூளப்பட்டறை பகுதியில் மேளதாளங்கள் முழங்க கைகளில் அக்கட்சியின் துண்டுகளை சுற்றி அதிமுகவினர் குத்தாட்டம் போட்டதை அங்கு கூடியிருந்தவர்கள் கண்டு ரசித்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *