எங்க போனாலும் கருப்பு கொடி ரெடி… ஆளுநரை எச்சரிக்கும் மார்க்சிஸ்ட்

காரல் மார்க்சையும்,மார்க்சியத்தையும் அவதூறாக பேசி வரும் தமிழ்நாடு ஆளுநர் ஆர் என் ரவி செல்லும் இடமெல்லாம் கருப்பு கொடி ஏந்தி போராட்டம் நடத்தப்படும் என இந்திய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் பாலகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்

சென்னை சைதாப்பேட்டையில், காரல் மார்க்சையும்,மார்க்சியத்தையும் தமிழ்நாடு ஆளுநர் அவதூறாக பேசியதாக கூறி சிபிஎம் கட்சி சார்பில் ஆளுநர் மாளிகை முற்றுகை போராட்டம் நடத்தப்பட்டது அப்போது கருப்பு கொடி ஏந்தி ஆளுநருக்கு எதிராக கோஷங்களை எழுப்பினர். இதையடுத்து செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த இந்திய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமை குழு உறுப்பினர் ஜி ராமகிருஷ்ணன், ஆளுநர் என்ற சட்டை கழட்டி விட்டு Rss பற்றி ஆர் என் ரவி பேசட்டும் இந்தியாவை  மார்கசியம் கெடுத்துவிட்டதாக ஆளுநர் பேசி வருகிறார் அவதுறாக பேசியதை திரும்ப பெறும் வரை போராட்டம் நடத்தப்படும் ஒரு கட்சியின் தேர்தலின் வெற்றி தோல்வியை வைத்து ஒரு தத்துவத்தை தீர்மானிக்க முடியாது என கூறினார்

பின்னர் பேசிய இந்திய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் பாலகிருஷ்ணன், மார்கசியம் தொடர்பான புத்தகத்தை ஆளுநருக்கு அனுப்பி வைக்க உள்ளோம் அப்போதாவது மார்க்சை பற்றி அவர் தெரிந்து கொள்ளட்டும் ஆளுநராக இருக்க வேண்டும் தவிர அரசியல்வாதியாக இருக்க கூடாது மிகப்பெரிய சிந்தனையாளர் மார்க்சை பார்த்து இந்தியாவை மார்க்சியம் சிதைத்துவிட்டது என்று ஆளுநர்  கூறுவது ஏற்க்க முடியாது

மனுஸ்சிமிர்தி, உள்ளிட்ட மூட நம்பிக்கை எதிர்த்து போராட வேண்டும் என சொல்லிக்கொடுக்கப்பட்டுள்ளது விடுதலை போராட்டத்தை காட்டி கொடுத்தவர்கள் Rss காரர்கள் விடுதலை போராட்டத்தை தூண்டிவிட்டார் என்பதால் மார்க்சை ஆர் என் ரவிக்கு பிடிக்கவில்லை காரல் மார்க்சையும்,மார்க்சியத்தையும் அவதூறாக பேசி வரும் தமிழ்நாடு ஆளுநர் ஆர் என் ரவி செல்லும் இடமெல்லாம் கருப்பு கொடி ஏந்தி போராட்டம் நடத்தப்படும் என எச்சரித்தார்

தொடர்ந்து தமிழகத்தில் மக்கள் உரிமைகளை சிதைக்கும் ஆளுநர் தமிழகத்தில் ஆளுநராக இருக்க கூடாது அதற்கான போராட்டம் தொடரும் தமிழகத்தில் பொதுவுடமை சித்தாந்தை கொண்டு வர முயற்சி செய்தவர் பெரியார் 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *