நிறுத்தி வைக்கப்பட்ட திட்டங்களை மீண்டும் ஈபிஎஸ் வந்து தருவார்… எஸ்.பி.வேலுமணி வாக்குறுதி
தமிழ்நாட்டின் மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் 75ம் ஆண்டு பிறந்த நாளை முன்னிட்டு ஈரோடு மாநகர் மாவட்ட அதிமுக அலுவலகத்தில் உள்ள முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா திருவுருவ சிலைக்கு அதிமுக வேட்பாளர் தென்னரசு, அதிமுகவின் முன்னாள் அமைச்சர்கள் செங்கோட்டையன் கேபி முனுசாமி, எஸ் பி வேலுமணி, சி.விஜயபாஸ்கர், சிவி சண்முகம், கடம்பூர் ராஜு, திண்டுக்கல் சீனிவாசன், காமராஜ், ஓ எஸ் மணியன், நத்தம் விஸ்வநாதன், அக்ரிகிருஷ்ணமூர்த்தி, பென்ஜமின் உள்ளிட்டோரும் அதிமுக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
தொண்டர்கள் மட்டுமல்ல பொதுக்குழு உறுப்பினர்கள் சட்டமன்ற உறுப்பினர்கள் நாடாளுமன்ற உறுப்பினர்கள் அத்தனை பேரும் ஆரம்ப கட்டத்தில் இருந்து எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் தான் இருக்கிறார்கள். அதைத்தான் உச்ச நீதிமன்றமும் சொல்லி உள்ளது… ஈரோட்டில் முன்னாள் அதிமுக அமைச்சர் எஸ் பி வேலுமணி
மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் பிறந்தநாளை கொண்டாடி வரக்கூடிய நிலையில் உச்ச நீதிமன்றம் நேற்றைய தினம் ஒரு அற்புதமான நியாயமான தீர்ப்பை வழங்கி உள்ளது. இதன் மூலம் இந்த பிறந்த நாளிலே மீண்டும் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் ஜெயலலிதா ஆட்சி அமைந்து எடப்பாடி பழனிச்சாமி முதலமைச்சர் ஆக வருவார்.
ஜெயலலிதா கொடுத்த திட்டங்கள் மட்டுமல்லாமல் நான்கரை ஆண்டு காலம் எடப்பாடி பழனிச்சாமியின் நல்ல திட்டங்களை கொடுத்துள்ளார். தமிழ்நாடு மக்களுக்காக கடந்த 21 மாதங்களாக எந்த திட்டமும் தராத திமுக அரசு இருக்கிறது. மீண்டும் மக்களுக்கு ஜெயலலிதா கொடுத்த திட்டங்கள் நிறுத்தி வைக்கப்பட்ட திட்டங்கள் அதை மீண்டும் எடப்பாடி பழனிச்சாமி வந்து தருவார்.
தொண்டர்கள் மட்டுமல்ல பொதுக்குழு உறுப்பினர்கள் சட்டமன்ற உறுப்பினர்கள் நாடாளுமன்ற உறுப்பினர்கள் அத்தனை பேரும் ஆரம்ப கட்டத்தில் இருந்து எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் தான் இருக்கிறார்கள். அதைத்தான் உச்ச நீதிமன்றமும் சொல்லி உள்ளது. எங்களுக்கு எதிரி திமுக தான் திமுக பற்றி கேட்டால் தான் நான் சொல்வேன், இந்த தீர்ப்பின் மூலம் மட்டுமல்ல திமுக ஆட்சியில் இருபத்தி ஒரு மாத காலமாக எதுவும் செய்யவில்லை
ஈரோடு மாவட்டத்திற்கு திட்டங்கள் அனைத்தையும் கொண்டு வந்தது அதிமுக தான், இந்த தீர்ப்பின் மூலம் உறுதியாக அதிமுக வேட்பாளர் தென்னரசு ஐம்பதாயிரம் வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறுவது உறுதி, தமிழ்நாடு மக்கள் முழுவதும் இந்த ஆட்சி போக வேண்டும் முதலமைச்சர் மு க ஸ்டாலின் எந்த திட்டத்தையும் மக்களுக்கு தரவில்லை 21 மாத காலமாக எதுவும் நடக்கவில்லை
எடப்பாடி பழனிச்சாமி நான்கரை ஆண்டு காலமாக சிறப்பாக ஆட்சி நடத்தினார் மக்களுக்கு தேவையான திட்டங்களை தந்தார் மீண்டும் எடப்பாடி பழனிச்சாமி முதலமைச்சராக எப்போது வருவார் என தமிழ்நாடு மக்கள் பார்த்துக் கொண்டுள்ளனர் அதற்காகத்தான் இந்த நல்ல தீர்ப்பு வந்துள்ளது என்று தெரிவித்தார்.