ஈபிஎஸ்-டிடிவி அணியினர் ஒன்றாக வாழ்க கோஷம் பரபரப்பில் அதிமுக அரசியல்…!
புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கியில் ஜெயலலிதாவின் 75 வது பிறந்தநாள் நிகழ்ச்சியை இபிஎஸ் ஓபிஎஸ் டிடிவி அணியினர் இனிப்பு வழங்கி கொண்டாட்டம்.
அறந்தாங்கி எம்ஜிஆர் சிலை அருகே ஜெயலலிதாவின் உருவப்படத்திற்கு ஓபிஎஸ் அணியைச் சேர்ந்த முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் ரத்தினசபாபதி மலர் தூவி மரியாதை செய்து பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கி கொண்டாட்டம். இதே போல் பேருந்து நிலையம் அருகே உள்ள அம்மா உணவகம் முன்பு ஜெயலலிதாவின் உருவப்படத்திற்கு இபிஎஸ் அணியை சேர்ந்த கட்சி நிர்வாகிகள் மலர் தூவி மரியாதை செய்து இனிப்பு வழங்கி கொண்டாடினர்
அதே பகுதியில் டிடிவி அணியினரும் மலர் தூவி மரியாதை செய்து இனிப்பு வழங்கி பிறந்த நாளை கொண்டாடினர் இபிஎஸ் டிடிவி அணியினர் பக்கத்திலேயே பிறந்தநாள் கொண்டாட்டத்தில் இபிஎஸ் வாழ்க டிடிவி வாழ்க என இரு அணிகளும் அருகில் மாறி மாறி கோஷங்களை எழுப்பியதால் அப்போது சிறிது நேரம் பரபரப்புடன் காணப்பட்டது.