சொல்லி அடித்த எடப்பாடி பழனிச்சாமி
இரண்டாம் தர்மயுத்தம் என்று இப்போதுதான் ஓபிஎஸ் அறிவித்தார். அவர் அறிவித்த நேரமோ என்னவோ தெரியவில்லை இன்று காலை ஜூலை 11ஆம் தேதி நடந்த பொதுக்குழு செல்லும் என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கி உள்ளது.
ஓபிஎஸ், இபிஎஸ் இரண்டு பேரும் இரண்டு தலைமைகளாக அதிமுகவில் வழிநடத்தி கொண்டிருந்தனர். வெளியே ஒற்றுமையாக இருப்பது போல் காட்டிக் கொண்டாலும் உள்ளுக்குள்ளே தொண்டர்கள் நடுவில் புகைச்சல் இருந்து கொண்டு தான் இருந்தது. அணிகள் இணைந்தாலும் மனங்கள் இணையவில்லை என்று பல தலைவர்கள் பேசியதை நாம் கேட்டோம்.
கடந்த ராஜ சபா எம்.பி. தேர்தல் வரும்போது இந்த மோதல் உச்சத்திற்கு முற்றியது. ஒற்றை தலைமை தான் வேண்டும் என்று இபிஎஸ் ஆதரவாளர்கள் முழங்க, இரட்டை தலைமையே நீடிக்க வேண்டும் என்று ஓபிஎஸ் ஆதரவாளர்கள் தொடர்ந்து வலியுறுத்த, போர்க்களம் துவங்கியது. இபிஎஸ் தரப்பினர் ஜூலை 11ஆம் தேதி பொதுக்குழு கூட்டி கிட்டத்தட்ட 95 சதவீத பொறுப்பாளர்களின் ஏகோபித்த ஆதரவுடன் இடைக்கால பொதுச் செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.
இந்த பொதுக்குழு கூட்டமும் இடைக்கால பொதுச் செயலாளர் தேர்வு செல்லாதன அறிவிக்க உயர் நீதிமன்றத்தை நாடினார் ஓபிஎஸ் அவர்கள். உயர் நீதிமன்றத்தின் முதல் தீர்ப்பில் அந்த பொதுக்குழு செல்லாது என அறிவிப்பு வர, இபிஎஸ் அவர்கள் செய்த மேல்முறையீட்டில் பொதுக்குழு செல்லும் என்ற உத்தரவு வந்தது. உடனே ஓபிஎஸ் அவர்கள் உச்ச நீதிமன்றத்தை நாடினார்.
உச்சநீதிமன்றம் வழக்கின் தீர்ப்பு வரும் வரை கட்சி சார்பாக இபிஎஸ் அவர்கள் எந்த ஒரு முடிவையும் எடுக்கக்கூடாது என்று நிபந்தனை விதித்தது. இப்போது உச்ச நீதிமன்றம் இன்று வழங்கிய தீர்ப்பின் மூலம் அந்த நிபந்தனை தவிர்ந்து அதிமுக என்னும் மாபெரும் கட்சி மொத்தமாக எடப்பாடி பழனிச்சாமி அவர்களின் வசம் சென்றுள்ளது. எடப்பாடி பழனிச்சாமி அவர்களின் மீது பல்வேறு விமர்சனங்கள் இருந்தாலும். ஒரு சாதாரண அடிமட்ட தொண்டனாக கட்சிக்குள் இணைந்து தற்போது மாபெரும் சக்தியாக வளர்ந்து இருக்கிறார்.
இது இந்தியாவில் அதிமுக போன்ற ஒரு சில கட்சிகளின் மட்டுமே சாத்தியம். இதனை அதிமுக மீண்டும் ஒருமுறை நிரூபித்துள்ளது. எம்ஜிஆர் ஜெயலலிதா போன்ற தலைவர்களின் அடுத்த வரிசையில் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் அதிமுக வை கைப்பற்றி தன் பெயரை பொறித்து கொண்டார். இப்போது ஓபிஎஸ் அவர்களின் அடுத்தகட்ட திட்டம் என்ன என்பதே அனைவரின் எதிர்பார்ப்பாக உள்ளது