மக்கள் முடிவெடுத்து விட்டார்கள்… பணத்தால் எதுவும் செய்ய முடியாது… துரை வைகோ சூசகம்

ஈரோடு இடைத்தேர்தலில் மக்கள் முடிவெடுத்து விட்டார்கள் அதில் பணத்தினை வைத்து மக்கள் முடிவினை மாற்ற முடியாது, கலைஞர் தமிழுக்கும் தமிழ் மக்களுக்கும் மிகப்பெரும் பங்காற்றியுள்ளர், அதை நினைவுகூறும் வகையில்  சுற்றுச்சூழல் பாதுகாதிக்காத வகையில் பேனா சின்னம் அமைப்பது வரவேற்கத்தக்கது. அதை சிலர் உடைப்பேன் இடிப்பேன் என்பது ஆரோக்கியமான அரசியல் அல்ல என்று மதிமுக தலைமை கழக செயலாளர் துரை வைகோ பேட்டி.

தேனி மாவட்டம் கம்பம் நகரில் தேனி மாவட்ட மதிமுக மாவட்ட செயலாளர் ராமகிருஷ்ணன் மகன் திருமண நிகழ்ச்சி கம்பம் தனியார் திருமண நிகழ்ச்சி வைகோ தலைமையில் நடைபெற்றது.

 இந்த திருமண நிகழ்ச்சியில் வைகோ கலந்து கொண்டு திருமாங்கல்யதை எடுத்து கொடுத்து திருமணத்தை நடத்தி வைத்தார். இந்த நிகழ்ச்சியில் மதிமுக தலைமை கழகச் செயலாளர் துரை வைகோ கலந்து கொண்டார்.

 திருமண நிகழ்ச்சிக்கு பின்னர் செய்தியாளர்களை சந்தித்த மதிமுக தலைமை கழக செயலாளர் துறை வைகோ கூறுகையில் ஈரோடு இடைத்தேர்தலில் பணம் புழக்கம் எவ்வளவு இருந்ததாலும் ஜனங்கள் முடிவெடுத்து விட்டார்கள், எனவே ஜனங்களின் எண்ணம் தான் வெல்லும், பணத்தால் ஜனங்களில் எண்ணத்தை மாற்ற முடியாது என்றும் டாக்டர் கலைஞர் தமிழுக்கும் தமிழ் மக்களுக்கும் மிகப்பெரும் பணியாற்றியுள்ளார் 

அதற்கு நினைவு கூறும் வகையில் தமிழக அரசு சுற்றுச்சூழலுக்கு மாசு ஏற்பபடாத வகையில் பேனா நினைவு சின்னம் அமைக்க முடிவு செய்துள்ளது. அது வரவேற்கதக்கது.  ஒருசிலர் பேனா சின்னத்தை அமைத்தால் நான் உடைப்பேன், இடிப்பேன் என்று கூறுவது ஆரோக்கியமான அரசியல் இல்லை என்று தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *