ஓ.பி.எஸ்-ன்  தாயார் உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதி

ஓ.பி.எஸ்-ன்  தாயார் உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதி. தேனி தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் தனது தாயை சந்திக்க ஓபிஎஸ் வந்துள்ளார்.

தேனி மாவட்டம் பெரியகுளத்தைச் சேர்ந்தவர் அதிமுக முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம். இவரின் தாயார் ஓ.பழனியம்மாள்(95)  வயது முதிர்வு உடல்நலக்குறைவால் தேனியில் உள்ள தனியார் மருத்துவமனையில் நேற்று இரவு சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.

ரத்த அழுத்தம் குறைந்ததன் காரணமாக தீவிர சிகிச்சை பிரிவில் வைத்து அவருக்கு சிகிச்சை அளித்து வருகின்றனர் தனது தாயை சந்திப்பதற்காக ஓபிஎஸ் மருத்துவமனைக்கு  வந்துள்ளார். தாயின் நலம் குறித்து மருத்துவர்களிடம் கேட்டறிந்தார். பின்னர் பெரியகுளத்தில் உள்ள அவரது வீட்டிற்கு புறப்பட்டுச் சென்றார். கடந்த மாதம் ஐந்தாம் தேதி ஓபிஎஸ் – தாய் உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு மூன்று நாட்கள் சிகிச்சை பெற்று வீடு திரும்பிய நிலையில் நேற்று இரவு மீண்டும் உடல்நலக்குறைவால் அனுமதிக்கப்பட்ட அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

அதிமுக பொதுக்குழு தொடர்பான வழக்கு இன்று உச்சநீதிமன்றத்தில் இன்று தீர்ப்பு வழங்கப்பட உள்ள நிலையில் ஓபிஎஸ் பெரியகுளத்தில் இருந்து வருகிறார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *