மோடியின் டிஜிட்டல் இந்தியா… மனிதக் கழிவை மனிதனே அள்ளும் அவலம்… சீமான் கடும்கோபம்…

தன்னாட்சி அமைப்பு என்று நாம் நம்பிக் கொண்டுள்ள அனைத்து அமைப்புகளும் மோடியின் ஐந்து விரல்களாக மாறிவிட்டது, அவர்கள் நம்புவது ஒன்று பணம் இன்னொன்று ஓட்டுப்பட்டி. டிஜிட்டல் இந்தியா என்று பேசுவார்கள்… ஈரோடு கிழக்கு தொகுதியில் நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தேர்தல் பரப்புரையில் பேச்சு

தன்னாட்சி அமைப்பு என்று நாம் நம்பிக் கொண்டுள்ள அனைத்து அமைப்புகளும் மோடியின் ஐந்து விரல்களாக மாறிவிட்டது, அவர்கள் நம்புவது ஒன்று பணம் இன்னொன்று ஓட்டுப்பட்டி. டிஜிட்டல் இந்தியா என்று பேசுவார்கள். 27 வாக்கு பதிவு முடிந்தவுடன் அன்று இரவோ அல்லது 28ம் தேதியோ சொல்லிட வேண்டியதுதானே. இரண்டு மூன்று நாள் ஏன் உள்ளே இருக்கிறது ஏனென்றால் அதை மாற்ற வேண்டும் அல்லவா. அது தான்‌ டிஜிட்டல் இந்தியா.

மனிதக் கழிவை இயந்திரத்தில் அள்ளிவிட்டு வாக்கு சீட்டு நடைமுறையை தான் அமெரிக்காவில் பின்பற்றுகின்றனர். டிஜிட்டல் என்று அவர்கள் பீத்திக் கொள்ளவில்லை, அவர்கள் வாக்குச்சீட்டு முறையை பின்படுத்தினாலும் உடனடியாக முடிவையும் அறிவித்து விடுகின்றனர். ஆனால் இங்கு வாக்கை இயந்திரத்தை போட்டுவிட்டு மனித கழிவை மனிதனை அல்ல வைத்துள்ளனர். 

கோயிலில் மணி அடிப்பது கூட கைகளில் கிடையாது இயந்திரத்தில் தான். போய் பாருங்கள் கோயில்களுக்கு தெரியும். நான் வந்தால் மனிதக் கழிவை இயந்திரம் மூலம் அள்ளுவேன். சிங்கப்பூர் மாதிரி என்கின்றனர் சிங்கப்பூரில் ஊழல் லஞ்சம் இல்லை ஆனால் இங்கு ஊழல் லஞ்சம் தான் நிர்வாகம்….. ஈரோடு கிழக்கு தொகுதி தேர்தல் பரப்புரை கூட்டத்தில் நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் பேச்சு.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *