‘பழனிச்சாமி அப்டேட் ஆகுங்கள்’… எம்.பி கனிமொழி சாடல்…!!
இந்த தேர்தலில் வெற்றி வாய்ப்பு முடிசெய்யப்பட்ட ஒன்று. வெற்றி பெற்று விட்டோம் என்பதில் சந்தேகமில்லை, எதிர் அணியில் நிற்கக்கூடிய வேட்பாளர் எப்படிப்பட்ட வேட்பாளர் என்பதை பார்க்கவேண்டும்.
அவர்களுக்கு வேட்பாளரை அறிவிப்பதில் பெரிய போட்டி பிரச்சனை, இரண்டு இலை வெவ்வேறு திசையில் நிற்கிறது. அவர்கள் பிஞ்சுக் கிட்டு நம்மை பிச்சுக்க வைக்கின்றனர் இரட்டை இலை இரட்டையிலையாக இல்லை தாமரையிலையாக மாறிவிட்டது. அந்த தாமரை இலை அதானி என்ற கோடீஸ்வரனை தாங்கி பிடித்துள்ள நிலையை பெற்றுள்ளது.
நேற்று இப்பகுதியில் பேசிய முன்னாள் முதலமைச்சர் பழனிசாமி தோல்வி பயத்தில் நடுங்கி கொண்டு பேசினார். நான் யாராக இருந்தாலும் மரியாதையாக பேசுவேன். ஏனென்றால் என் அப்பா வகித்த பதவியையும் என் அண்ணன் வகித்து வரக்கூடிய பதவியிலும் அவர் இருந்தவர் அதனால் அவருக்கு மரியாதை தரவேண்டும். ஆனால் யாருக்கு மரியாதை கொடுக்கனும் எனக்கு தெரியவில்லை,
பழனிச்சாமிக்கு தோல்வி என்பது உறுதிஆகிவிட்டது. அதற்கான காரணத்தை தேட மக்களை அடைத்து வைத்துள்ளனர் என்று பழனிச்சாமி கூறியுள்ளார், அதிமுகவில் இருக்க கூடியவர்களா மகக்ள் அடிக்கடி வந்து தங்களை அடைத்துக் கொள்ளுங்கள் என்று கூறுவதற்கு. தோல்விக்கான காரணங்களை தேடி கூறி வருகின்றனர்.
மீசை வைத்த ஆனாக இருந்தால் பதில் கூற வேண்டும் என்று முதலமைச்சரை பார்த்து எடப்பாடி பழனிச்சாமி பேசியுள்ளார். எந்த மண்ணில் ஆண்மை என்னும் திமீர் அழிய வேண்டும் என்று பெரியார் எடுத்துரைத்தாரோ அதே மண்ணில் நின்று அப்படி பேசியுள்ளார் பதவி வேண்டும் என்பதற்காக யார் காலில் எல்லாம் விழுந்தார் என்பது அனைவருக்கும் தெரியும்.
தமிழக முதலமைச்சர் தைரியம் உள்ள தலைவன் யாரைக் கண்டும் மிரண்டதில்லை எதற்கும் அஞ்சிய தும் பின்வாங்கியது இல்லை கொள்கையை விட்டுக்கொடுத்தது ஜெயலலிதா இறந்ததற்கு பின்பு தான் நெஞ்சை நிமிர்த்தி முதுகெலும்பை நிமிர்த்தி அவர்கள் பேசுகீறீர்கள். பழனிச்சாமி மண்புழு போல போனது தான் ஆண்மைக்கு அழகா இது தான் வீரமா வீரத்திற்கும் வெஸ்டிக்கும் என்ன வித்யாசம்
பழனிச்சாமி அப்டேட் ஆகுங்கள், 50 ஆயிரம் கொடுத்தால் ஆண் பெண் ஆகலாம் பெண் ஆண் ஆகலாம் இது இப்படிப்பட்ட முதலமைச்சரிடமிருந்து நாட்டை காப்பாற்றியதால் ஸ்டாலினுக்கு நன்றி சொன்னேன். இவர்களுக்கு இந்த தேர்தலில் சரியான பாடம் புகட்டப்பட வேண்டும்.
எனது அண்ணன் ஸ்டாலினுக்கு பதில் சொல்ல நேரமில்லை அவருக்கு நேரம் உள்ளது உங்களைப் போல் வேலை வெட்டி இல்லாமல் இல்லை முடிந்தால் என்னுடன் இறங்கி நடங்க உங்களுக்கு தைரியம் இருந்தால். நீங்கள் இறங்கினால் என்னாகும் என்று நினைத்து பாருங்கள், கட்சகறிகாரர்களின் பாதுகாப்பு இல்லாமல் உங்களால் வீதியில் நடந்து செல்ல முடியாது. ஏற்கனவே உங்களது வேட்பாளரை மக்கள் விரட்டி அடிக்கின்றனர். அவருக்கே இந்த நிலை என்றால் உங்களுக்கு
தோல்வி பயத்தில் பிதற்றுவதை நிறுத்தி விடுங்க மக்கள் மறந்துவிடவில்லை நீங்கள் செய்த துரோகத்தை மக்கள் மன்னிக்கவும் மாட்டார்கள், மறக்கவும் மாட்டார்கள். கேவலத்தை இந்த மன் சுமக்க கூடாது பாடம் புகட்டி வீட்டிற்கு அனுப்பி வேண்டும். முதுகில் ஏறி சவாரி செய்து தமிழ்நாட்டை பிடித்து விடலாம் என்று எண்ணுகிற பாஜகவுக்கு அது பாடமாக இருக்க வேண்டும் சுயமரியாதைக்காக கைச்சின்னத்திற்கு வாக்குகளை அளிக்கப் வேண்டும். கேட்டுட்டு கீழ்த்தறமாக பேசக்கூடியவர்களுக்கு பாடம் சொல்ல மறந்து விடாதீர்கள்… எம் பி கனிமொழி பேச்சு