‘ஆளவிடுடா சாமி…’ ஓட்டு கேட்டு வந்த முன்னாள் அமைச்சரை பார்த்து ஓட்டம்பிடித்த மாடு…!

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர் தென்னரசுக்கு ஆதரவாக இரட்டை இலை சின்னத்திற்கு முன்னாள் அதிமுக அமைச்சர் உதயகுமார் சந்தனம் குங்குமம் பூ கொடுத்து வாக்கு சேகரித்த போது மாட்டு வண்டி தொழிலாளி ஒருவரிடம் இரட்டை இலைக்கு வாக்களிக்க துண்டு பிரசுரம் விநியோகித்த போது வண்டியில் கட்டப்பட்டிருந்த மாடு வண்டியுடன் வெரித்து ஓடியதால் பரபரப்பு ஏற்பட்டது

ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர் தென்னரசுவிற்கு ஆதரவாக முன்னாள் அதிமுக அமைச்சர் உதயகுமார் பன்னீர்செல்வம் பூங்கா அருகே உள்ள கடைகளில் துண்டு பிரசுரம் விநியோகம் செய்தும் சந்தனம் குங்குமம் பூ வழங்கியும் இரட்டை இலை சின்னத்திற்கு வாக்குகளை சேகரித்தார். 

அப்போது மாட்டு வண்டி தொழிலாளர் மாட்டு வண்டியை நிறுத்திவிட்டு நின்ற நிலையில் அவரிடம் முன்னாள் அமைச்சர் உதயகுமார் துண்டு பிரசுரமும் சந்தனம் குங்குமம் பூவும் கொடுத்து வாக்கு கேட்டபோது வண்டியில் கட்டப்பட்டிருந்த மாடு வண்டியுடன் வெரித்து ஓடியது. பின்னர் சற்று தூரத்திலேயே அந்த மாட்டு வண்டி தொழிலாளி வண்டியைப் பிடித்து இழுத்து மாட்டை நிறுத்தினார்.‌ இதனால் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *