இடைத்தேர்தல் விதிமீறல்- தேமுதிக நிர்வாகி மீது வழக்கு பதிவு..
இடைத்தேர்தலுக்காக நேற்று சம்பத்நகரில் தேமுதிக பணிமனை திறக்கப்பட்டது. தேமுதிக எல்.கே சுதீஷ் அலுவலகத்தை திறந்து வைத்தார்.
தேர்தல் அலுவலகத்திற்கு முன்பாக அனுமதி இன்றி கொடிகள் கட்டப்பட்டிருந்ததை பறக்கும் படை அதிகாரிகள் மற்றும் போலீசார் அகற்ற கூறினர். ஆனால் அதற்கு மறுத்து தேமுதிக வினர் வாக்குவாதம் செய்தனர்.
இந்நிலையில், தேர்தல் நடத்தை விதிகளை மீறியதாக தேமுதிக மாவட்ட துணை தலைவர் ரங்கராஜன் மீது ஈரோடு வடக்கு காவல் நிலைய போலீசார் இரண்டு பிரிவுகளில் வழக்கு பதிவு செய்துள்ளனர்..