உயர், உச்ச நீதிமன்றங்களில் ‘பிராமின்’ ஆதிக்கத்தை கண்டித்து தி.க ஆர்ப்பாட்டம்.

chennai high court

திராவிட கழகம் சார்பாக இன்று தேனியில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் உச்ச நீதிமன்றம் மற்றும் உயர் நீதிமன்றத்தில் உயர் ஜாதி வகுப்பார் பார்ப்பன நீதிபதிகள் ஆதிக்கம் அதிகரித்துள்ளதை கண்டித்தும், தகுதி இருந்தும் ஒடுக்கப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த மூத்த நீதிபதிகள் புறக்கணிப்படுவதாகவும், மத்தியில் ஆளும் ஒன்றிய அரசை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

தேனி பழைய பேருந்து நிலையத்தில் திராவிட கழகம் சார்பாக நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து நாம் தமிழர் கட்சியினர், இந்திய முஸ்லிம் லீக், தமிழ் புலிகள் அமைப்பைச் சேர்ந்தோர் ஏறாளமானோர் கலந்துகொண்டு ஒன்றிய அரசிற்கு எதிராக கண்டன கோஷங்களை எழுப்பி போராட்டம் செய்தனர். 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *