சிவி.சண்முகத்தை கண்டு கொள்ளாத எடப்பாடி? சமாதான முயற்சியில் முன்னாள் அமைச்சர்கள்…!
முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி பங்கேற்ற ஈரோடு கிழக்கு சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர் அறிமுக பிரச்சார பொதுக்கூட்டத்திற்கு வருகை தந்த முன்னாள் அமைச்சர் சிவி சண்முகத்தை யாரும் கண்டு கொள்ளாததால் மேடையை விட்டு கீழே இறங்கி சென்ற நிலையில் அவரை சமாதானம் செய்து முன்னாள் அமைச்சர்கள் மீண்டும் மேடை ஏற்றினர்,
இதே போல் எடப்பாடி பழனிச்சாமி பரப்புரை மேற்கொள்ளும் பொழுது மேடையில் அமர்ந்திருந்த முன்னாள் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் தூங்கி வழிந்தும் கேபி முனுசாமி நத்தம் விஸ்வநாதன் பேச்சைக் கேட்டு கொட்டாய் விட்டது நகைப்புக்கு உள்ளாகியது
ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர் அறிமுக பிரச்சார பொதுக்கூட்டம் வேப்பம்பாளையத்தில் நடைபெற்றது. இதில் அதிமுகவின் இடைக்கால பொதுச் செயலாளரும் முன்னாள் முதலமைச்சருமான எடப்பாடி பழனிச்சாமி கலந்துகொண்டு அதிமுக வேட்பாளர் தென்னரசுவை ஆதரித்து பரப்புரை மேற்கொண்டார்.
அப்போது இந்த கூட்டத்தில் அதிமுகவை சேர்ந்த முன்னாள் அமைச்சர்கள் பலரும் பங்கேற்ற நிலையில் சிவி சண்முகமும் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்க வருகை தந்த போது அவரை யாரும் கண்டு கொள்ளாததால் மேடை ஓரத்தில் அமர்ந்திருந்த அவர் பின்னர் மேடையை விட்டு கீழே இறங்கி சென்ற நிலையில் அவரை முன்னாள் அமைச்சர்கள் தங்கமணி வேலுமணி ஆகியோர் சமாதானம் செய்து மீண்டும் மேடைக்கு அழைத்து வந்த நிலையில் மேடையில் அமர்ந்திருந்த அனைவரையும் சிவி சண்முகம் கும்பிட்டு வணக்கம் சொல்லி சென்ற போது முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமியை கண்டு கொள்ளாமல் மேடையில் மற்றொருபுறத்தின் ஓரத்தில் அமர்ந்ததால் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
இதேபோல் எடப்பாடி பழனிச்சாமி தென்னரசுவை ஆதரித்து பரப்புரை மேற்கொண்ட போது மேடையில் அமர்ந்திருந்த முன்னாள் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் தூங்கி வழிந்ததும் அதேபோல் பழனிச்சாமி பேச்சைக் கேட்டு முன்னாள் அமைச்சர்கள் கேபி முனுசாமி நத்தம் விஸ்வநாதன் ஆகியோர் கொட்டாய் விட்டது நகைப்புக்குள்ளாகியது.