யாருமில்லாமல் வெறிச்சோடியது அதிமுக ஓபிஎஸ் தேர்தல் பணிமனை… குழப்பத்தில் தொண்டர்கள்
வெறிச்சோடியது அதிமுக ஓபிஎஸ் தேர்தல் பணிமனை. ஓபிஎஸ் நிலைப்பாடு குறித்து தெரியாமல் ஆதரவாளர்கள் குழப்பம்…
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் ஏற்கனவே அறிவிக்கப்பட்ட வேட்பாளர் தென்னரசுவுக்கு அதிமுக பொதுக்குழு உறுப்பினர்களிடம் ஆதரவு கடிதம் பெறும் முயற்சியில் எடப்பாடி அணி தீவிரமாக ஈடுபட்டு வரும் சூழலில், ஓபிஎஸ் நிலைப்பாடு குறித்து அறிவிக்காமல் மௌனம் காப்பது அவரது ஆதரவாளர்களிடையே குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது..
ஓபிஎஸ் அறிவித்த வேட்பாளரை திரும்பப் பெறப் போகிறாரா என்பது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வெளியாகாத நிலையில், ஈரோட்டில் இரு தினங்களுக்கு முன் திறக்கப்பட்ட ஓபிஎஸ் அணி அதிமுக தேர்தல் பணிமனை வெறிச்சோடி காணப்படுகிறது…