ஈபிஎஸ், ஓபிஎஸை பொம்மலாட்டம் ஆட வைக்கும் பாஜக… தி.க கடும் சாடல்…

Newslite_Spl_Article

தற்போது நடைபெறும் ஆட்சியைப் போல் இதுவரை வந்ததாக சரித்திரம் இல்லை ஒரு முதலமைச்சர் வெளிப்படை தன்மையோடு அனைவருக்கும் அனைத்தும் என பிரகடனப்படுத்தியுள்ளார், திராவிட மாடல் பற்றி தெரியாமல் சிலர் பேசிக்கொண்டு வருகின்றனர், தூங்குபவர்களை பற்றி கவலைப்பட்டு எழுப்புவோம் 

ஆனால் தூங்குகின்ற மாதிரி நடிப்பவர்களை எழுப்ப முயற்சித்தால் அது பயனில்லை, ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலை பொருத்தவரை ஈவிகேஎஸ் இளங்கோவனுக்கு பொதுமக்கள் வாக்களிக்க ஆயத்தம் ஆகிவிட்டனர், எதிர் வேட்பாளர் யார் என்று தெரியவில்லை சிலர் நிற்கிறார்கள் ஆனால் அவர்கள் கடைசி வரை நிற்பார்களா என்பது தெரியவில்லை அவர்களுக்குள் இருக்கும் பிரச்சனை அவர்களை சரி செய்ய முடியவில்லை அவர்களை பற்றி பேச வேண்டியதும் இல்லை, 

பாஜக தமிழ்நாட்டில் கொல்லைப்புறமாக வர எட்டிப் பார்த்து ஒத்திகை பார்த்து வருகின்றனர், நமது சகோதரர்களை பொம்மலாட்டம் ஆட வைத்து இந்த கையில் ஒரு நூல் அந்த கையில் ஒரு நூல் என வைத்து இருவரையும் பிரித்து செயல்படுத்தி வருகின்றனர், அவர்களை அடையாளம் கண்ட மக்கள்தான் ஈரோடு கிழக்கு தொகுதி மக்கள்.

அடகு வைத்த பொருளை (அதிமுக) மீட்கவில்லை என்றால் வண்டி அதிகமாகிவிடும் பிறகு மொத்தமாக அடகு வைத்த பொருளை விற்க வேண்டிய நிலை ஏற்படும் அவர்களும் நமது சகோதரர்கள் தான் அவர்களையும் கண்காணிக்க வேண்டிய இயக்கமாகத்தான் நாம் உள்ளோம்… ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட திருநகர் காலணியில் திராவிட கழக தலைவர் கி.வீரமணி பேச்சு.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *