அதிமுக நிலைமை பரிதாபமாக உள்ளது… தொல்.திருமாவளவன் அதிரடி…!

ஈரோடு கிழக்கு  திமுக கூட்டணி வேட்பாளர் வெற்றி பெருவது உறுதி, இந்த தேர்தலில் அதிகவின் நிலை பரிதாபமாக உள்ளது, தற்போதைய அதிமுக பிளவை பயன்படுத்தி பாஜக தமிழகத்தில் கால் ஊன்ற பார்க்கிறது, அதிமுக தொண்டர்கள் உஷாராக இருக்க வேண்டும், வேங்கை வயல் கிராமத்தில் பட்டியல் இன மக்களுக்கு தனி தண்ணீர் தொட்டி கட்டுவதில் எனக்கு உடன்பாடு இல்லை பொதுத்தொட்டி கட்ட வேண்டும் என்பதே அரசுக்கு நான் விடும் கோரிக்கை, 

இந்த விவகாரத்தில் திமுக அரசை விமர்சிக்க வேண்டும் என்ற எண்ணத்தில் வேங்கைவயல் விவகாரம் குறித்து தனது கருத்துக்களை சீமான் கூறி வருவதாகவும் அவருக்கு பெரியாரை எதிர்க்க வேண்டும் திராவிடத்தை எதிர்க்க வேண்டும் என்பதே கோட்பாடாக உள்ளது, இந்த விவகாரத்தில் திமுகவை கேள்வி கேட்கும் சீமான் ஏன் பாஜக மற்றும் அதிமுகவை கேள்வி கேட்கவில்லை..?புதுக்கோட்டை மாவட்டம் வேங்கை வயலில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் பேட்டி

புதுக்கோட்டை மாவட்டம் வேங்கை வயல் கிராமத்தில் பட்டியலின சமூக மக்கள் வசிக்கும் பகுதியில் உள்ள மேல்நிலை நீர் தேக்க தொட்டியில் மனிதக் கழிவு கலக்கப்பட்ட சம்பவம் கடந்த டிசம்பர் மாதம் 26ம் தேதி கண்டறியப்பட்டது பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.

இந்நிலையில் சம்பந்தப்பட்ட கிராமத்திற்கு இன்று விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் நேரில் சென்று அப்பகுதி மக்களை சந்தித்து நடந்த விவரங்களை கேட்டு  அறிந்ததோடு நம் மக்களுக்கு ஆறுதலையும் கூறினார். மேலும் அங்கு நடைபெற்ற மருத்துவ முகாமையும் பார்வையிட்ட திருமாவளவன் தானும் உடல் பரிசோதனை செய்து கொண்டார்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த திருமாவளவன் கூறுகையில்: வேங்கைவயலில் குடிநீர் தொட்டியில் மனித கழிவு கலக்கப்பட் சம்பவம் மனிதாபிமானம் உள்ள எவராலும் சகித்து கொள்ள முடியாது உலகமுழுவதிலும் உள்ள ஜனநாய சக்திகள் வெட்கபட வேண்டிய அவலம் என்றும்

இது குறித்து தமிழக முதல்வரை சந்தித்து பேசினேன் என்றும் சட்டபேரவையிலும் விசிக சார்பில் கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டுவரப்பட்டது என்றும் தமிழக முதல்வரும் இப்பிரச்சனையில் நடவடிக்கை எடுப்பதாக கூறியுள்ளார் என்றும் ஏற்கனவே காவல்துறையினர் காலம் தாழ்த்துகின்றனர் பாதிக்கப்பட்ட மக்களையே  காவல்த்துறையினர் குற்றவாளியாக ஆக்க முயல்வதாக எழுந்த குற்றசாட்டின் அடிப்படையில் இந்த வழக்கு சிபிசிஐடிக்கு போலீசாருக்கு மாற்றப்பட்டுள்ளது என்றும் அவர் கூறினார்.

மேலும் இது குறித்து திருமாவளவன் கூறுகையில்:முதல்வர் இந்த பிரச்சனையில் அக்கரையோடு செயல்பட்டாலும், இன்னும் குற்றவாளிகளை கண்டுபிடிக்கபடாமல் இருப்பது அதிர்ச்சி அளிக்கிறது, இருந்த போதிலும் குற்றவாளிகள் கைது செய்யபடுவார்கள் என்ற நம்பிக்கை உள்ளது என்று திருமாவளவன் கூறினார்.

மேலும் அவர் கூறுகையில் இந்த விவகாரத்தில் தமிழக முதல்வர் குற்றவாளிகளை கைது செய்ய அனைத்து விதமான நடவடிக்கைகளையும் எடுத்து வருகிறார்கள் என்றும் எங்களை பொறுத்தவரையில் தலித்துக்களுக்கு எதிரான அரசாக இந்த அரசை பார்க்கவில்லை என்றும் முதலில் காவல்துறையினரும் பின்னர் சி பி சி ஐ டி போலீசாரும் குற்றவாளிகளை கைது செய்வதில் ஏன் காலம் தாழ்த்தி வருகிறார்கள் என்ற காரணம் தான் தெரியவில்லை என்றும் அவர் கூறினார்.

மேலும், வேங்கைவயலில் புதிய குடிநீர் தொட்டி கட்டுவதில் எனக்கு உடன்பாடு இல்லை என்றும் பொது குடிநீர் தொட்டி கட்ட வேண்டும் என்பதே அரசுக்கு நான் விடுக்கும் கோரிக்கை என்றும் இது குறித்து ஏற்கனவே தமிழக முதல்வரிடம் வலியுறுத்தி உள்ளதாகவும் திருமாவளவன் கூறினார்.

மேலும் அவர் கூறுகையில், திமுக அரசை விமர்சிக்க வேண்டும் என்ற எண்ணத்தில் வேங்கைவையில் விவகாரம் குறித்து தனது கருத்துக்களை கூறி வருவதாகவும் அவருக்கு பெரியாரை எதிர்க்க வேண்டும் திராவிடத்தை எதிர்க்க வேண்டும் என்பதே கோட்பாடாக உள்ளது என்றும் இந்த விவகாரத்தில் திமுகவை கேள்வி கேட்கும் சீமான் ஏன் பாஜக மற்றும் அதிமுகவை கேள்வி கேட்கவில்லை என்றும் சீமானுக்கு வேங்கைவயல் பிரச்சனைக்கு தீர்வு காண வேண்டும் என்பதைவிட, பெரியார் எதிர்ப்பு திராவிட எதிர்ப்புத்தான் மேலோங்கியுள்ளது, அவர் என்னை விமர்சனம் செய்துள்ளது  என் மீதான காழ்புணர்ச்சியை காட்டுகிறது என்று திருமாவளவன் கூறினார்.

மேலும் அவர் கூறுகையில்: ஈரோடு கிழக்கு  திமுக கூட்டணி வேட்பாளர் வெற்றி பெருவது உறுதி, இந்த தேர்தலில் அதிகவின் நிலை பரிதாபமாக உள்ளது, தற்போதைய அதிமுக பிளவை பயன்படுத்தி பாஜக தமிழகத்தில் கால் ஊன்ற பார்க்கிறது, அதிமுக தொண்டர்கள் உஷாராக இருக்க வேண்டும்,

மக்கள் நீதி மையம் கட்சித் தலைவர் கமலஹாசன் திமுக கூட்டணிக்கு ஆதரவு தெரிவித்திருப்பது வாக்கு வங்கிக்கு வலு சேர்க்கும் என்று நான் கருதவில்லை அதே வேளையில் பாஜவிற்கு எதிராக ஓரணியில் சேர்ந்திருப்பதை நான் வரவேற்கிறேன்,

நான் ஜாதிய தலைவராக இல்லாமல் அனைத்து சமூக மக்களின் பிரச்சனைகளுக்காகவும் களத்தில் நின்று போராடி வருகிறேன் என்றும் திருமாவளவன் கூறினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *