தமிழ்நாடு அமைதியை குழைக்கும்  சீமான் மீது போலீசில் வழக்கறிஞர் புகார் 

திருச்சி மாவட்டம், மணப்பாறை டிஎஸ்பி ராமநாதனிடம், அரசு வழக்கறிஞர் முரளிகிருஷ்ணன் அளித்துள்ள புகாரில், 

ட்டுவிட்டரில் @SunandhaTS என்ற கணக்கிலிருந்து நாம் தமிழர் கட்சியினுடைய மாநில ஒருங்கிணைப்பாளர் சீமான் தமிழ்நாடு முன்னாள் முதலமைச்சர் மறைந்த டாக்டர் கலைஞர் மு.கருணாநிதி அவர்களுக்கு பேனா வடிவத்தில் கடலில் நினைவு சின்னம் அமைத்தால் அதனை எதிர்த்து நினைவு சின்னத்தை உடைத்து எரிவேன் என்று மிகவும் ஆபாசமாக மிரட்டல் தொணியில் கொலை மிரட்டல் விடுத்து பேசி அதனை மேற்படி கணக்கில் வீடியோவாக பதிவேற்றம் செய்து சோசியல் மீடியாவில் தமிழ்நாடு முன்னாள் முதலமைச்சர் கலைஞர் கருணாநிதியின் நற்பெயருக்கும், புகழுக்கும் அவர் தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கு ஆற்றிய அரிய சேவைகள் மற்றும் சாதனைகள் ஆகியவற்றிற்கு கலங்கம் ஏற்படும் விதமாகவும், 

தமிழ்நாடு அமைதியான முறையில் பயணிப்பதை விரும்பாத சீமான் அரசியல் சுய லாபத்திற்காக மறைந்த முன்னாள்

முதலமைச்சர் முத்தமிழறிஞரை அவதூறாக பேசி நினைவு சின்னம் அமைக்கும் தமிழ்நாடு அரசையும் மிகவும் தரம்தாழ்ந்து விமர்சனம் செய்து அமைதி பூங்காவான தமிழ்நாட்டை கலவர பூமியாக மாற்றி, சட்ட ஒழுங்கை சீர்குலைத்து அதன் மூலம் அரசியல் ஆதாயம் தேட முயற்சி செய்து வருவதால் சீமான் மீது உரிய வகையில் குற்றவியல் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறியுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *