ஒரே நாளில் 16 பேர் வேட்பு மனு தாக்கல்… பரபரப்பாகும் ஈரோடு இடைத்தேர்தல்…!

ஈரோடு கிழக்கு தொகுதி சட்டமன்ற இடைத்தேர்தலில்  நான்காம் நாள் வேட்பு மனு தாக்கல் மாலை 3 மணியுடன் நிறைவு, இன்று ஒரே நாளில் 16 பேர் வேட்பு மனுவை தாக்கல் செய்துள்ள நிலையில் இதுவரை 36 பேர் வேட்பு மனு செய்துள்ளனர்

ஈரோடு சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தல் நான்காவது நாள் வேட்பு மனு தாக்கல் மூன்று மணியுடன் நிறைவு, இன்று ஒரே நாளில் திமுக கூட்டணி கட்சி காங்கிரஸ் வேட்பாளர் இவிகேஎஸ் இளங்கோவன், அமமுக வேட்பாளர் சிவபிரசாத், ஓபிஎஸ் தரப்பு அதிமுக வேட்பாளர் செந்தில் முருகன், கள்ளக்குறிச்சி மாவட்டம் கனியாமூர் பகுதியைச் சேர்ந்த மாற்றுத்திறனாளி சுயட்சை வேட்பாளர் மணிவண்ணன் உள்ளிட்ட 16 பேர் வேட்பு மனு தாக்கல் செய்துள்ளனர்.

மேலும் இன்று வரை ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் 36 பேர் வேட்பு மனு தாக்கல் செய்துள்ளது குறிப்பிடத்தக்கது. குறிப்பாக பிரதான கட்சிகளை சேர்ந்த வேட்பாளர்கள் அனைவரும் வேட்பு மனுவை தாக்கல் செய்துள்ள நிலையில் இன்னும் இபிஎஸ் தரப்பு அதிமுக வேட்பாளர் தென்னரசு மட்டும் வேட்பு மனுவை தாக்கல் செய்யவில்லை.‌ அவர் வேட்பு மனு அளிக்க கடைசி தினமான வருகின்ற 7ம் தேதி தனது வேட்பு மனுவை தாக்கல் செய்வார் என இபிஎஸ் தரப்பு அதிமுகவினர் அறிவித்துள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *