மத்திய அமைச்சர்களின் தென்மாவட்ட வருகையால் எதுவும் நடக்க போவதுஇல்லை… எம்.பி.சு.வெங்கடேசன்

மதுரை விமான நிலைய விரிவாக்கம் செய்ய நிலம் கையகப்படுத்துவதில் தமிழக அரசு இரண்டு நீர் பிடிப்பு இடங்களை உச்ச நீதிமன்ற ஆணையின்படி வகை மாற்றம் செய்ய வேண்டிய தவிர வேறு எந்த பிரச்சனையும் இல்லை. எம்.பி சு. வெங்கடேசன், சென்னையில் இருந்து மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு வெங்கடேசன் விமான மூலம் மதுரை விமான நிலையம் வந்தார் தொடர்ந்து செய்தியாளர்களை சந்திப்பில்.

மதுரை விமான நிலைய விரிவாக்கம் குறித்த கேள்விக்கு..

கடந்த நான்கு மாதங்களில் ஆறு முறை மத்திய விமான போக்குவரத்து துறை அமைச்சர் மதுரை  வந்து சென்றுள்ளார். இத்தனை முறை வந்து சென்றாலும் மதுரை விமான நிலையம் குறித்து கேட்க மறுக்கிறாரா? அல்லது திசை திருப்புகிறாரா? என்பது ஒரு கேள்வியாகவே இருக்கிறது

கடந்த பாராளுமன்ற கூட்டத்தொடரில் மதுரை விமான நிலையம் 24 மணி நேரம் செயல்படும் விமான நிலையமாக மாற்றப்பட வேண்டும் என கேள்வி எழுப்பினேன் அதற்கு விமான போக்குவரத்து துறை அமைச்சர் திசை திருப்பக் கூடிய பதிலாகவே அளித்துள்ளார். இரவு நேரங்களில் விமானங்கள் இயங்கவில்லை என கேட்டால் விமான நிலையம் இரவு நேரங்களில் இயங்கவில்லை என கூறுகின்றனர்.. 

இரவு நேரங்களில் விமான நிலையம் இயங்க வேண்டும் என கேட்டால் இரவு நேரங்களில் விமானங்கள் இயங்கவில்லையே என மாறி மாறி திசைதிருப்பும் பதிலாகவே கூறுகின்றனர்.

மதுரை விமான நிலைய விரிவாக்கத்திற்கு தமிழக அரசு நிலம் ஒப்படைக்கவில்லை என மத்திய இணை அமைச்சர் V.K சிங் குற்றச்சாட்டுக்கு. மதுரை விமான நிலைய விரிவாக்கத்திற்காக 97 சதவீதம் நிலம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. தமிழக அரசிடம் உள்ள இரண்டு நீர் பிடிப்பு இடங்களை உச்ச நீதிமன்ற ஆணையின்படி வகை மாற்றம் செய்ய வேண்டிய தவிர வேறு எந்த பிரச்சனையும் இல்லை..

விமான நிலைய ஓடுபாதைக்கும் இந்த நீர்ப்பிடிப்பு இடத்திற்கும் எந்த சம்பந்தமும் இல்லை பாஜக தமிழகத்தை புறக்கணிக்க வேண்டும் மதுரை விமான நிலையத்தை புறக்கணிக்க வேண்டும் என்கின்ற பாஜகவின் அணுகுமுறை என்றார்.

பொங்கல் தொகுப்பில் கரும்பு வாங்க வேண்டும் என்பதை தான் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்துகிறது நிச்சயம் தமிழக முதலமைச்சர் இந்தக் குரலுக்கு நிச்சயம் செவி சாய்ப்பார். எண்ணற்ற விவசாயிகள் செங்கரும்பை நட்டுள்ளனர்.

இதனைக் கொள்முதல் செய்ய வேண்டிய கடமை அரசுக்கு உள்ளது என இதனை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பாக வலியுறுத்துகிறோம் என சு.வெங்கடேசன் கூறினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *