பாஜகவுடன் தேர்தல் கூட்டணி மட்டுதான் கொள்கையில் அல்ல… சப்பக்கட்டும் அதிமுக அமைப்பு செயலாளர்   

பாஜகவுடன் தேர்தல் நேரத்தில் மட்டுமே கூட்டணி அதைப் பற்றி நீங்கள் கவலைப்பட தேவையில்லை ஆனால் சிறுபான்மை மக்கள் உங்களை என்றும் காக்கின்ற பொறுப்பு அ.தி.மு.க-விற்கு உண்டு அ.தி.மு.க அமைப்பு செயலாளர் கோ.அரி திருத்தணி கிறிஸ்துமஸ் விழாவில் பேச்சு…

திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி சித்தூர் சாலையில் உள்ள புனித பணி மாதா ஆலயத்தில் அ.தி.மு.க சார்பில் கிறிஸ்துமஸ் விழா நடைபெற்றது, இந்நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராக அ.தி.மு.க அமைப்பு செயலாளர் திருத்தணி கோ.அரி கலந்து கொண்டார், இக்கூட்டத்தில் சிறப்பு பிரார்த்தனை செய்யப்பட்டது,

அதன் பிறகு கிறிஸ்தவர்களுக்கு ஆண்கள்  & பெண்கள் அனைவருக்கும் வெட்டி சேலை புத்தாடைகள் ஆகியவற்றை அமைப்பு செயலாளர் அரி வழங்கினார், மேலும் நிகழ்ச்சியில் அவர் பேசியது- கடந்த காலங்களில் சிறுபான்மை மக்களான நீங்கள் அ.தி.மு.க-விற்கு முன்னாள் முதல்வர்கள் ஜெயலலிதா அவர்களுக்கு  ஆதரவாக இருந்து உள்ளீர்கள். அதனை தொடர்ந்து சிறிய கசப்பான சம்பவமாக பாஜகவுடன் கூட்டணி வைத்து தேர்தலை சந்தித்து அதோடு பாஜக கூட்டணி போய்விடுகிறது, அவர்கள் கொள்கை வேறு

ஆனால் பாஜகவுடன் கூட்டணி வைத்ததற்காக அ.தி.மு.க-வை கிறிஸ்தவ மக்கள் நீங்கள்  கடந்த தேர்தலில் எதிரியாக பார்த்தீர்கள் ஆனால் பாஜக தேர்தல் கூட்டணி அதோடு அவர்கள் போய்விடுவார்கள், ஆனால் இந்த மாநிலத்தை ஆளுகின்ற பொறுப்பு யார் நல்லவர்கள் யார் கெட்டவர்கள் என்பதை நீங்கள் எல்லாம் கிறிஸ்தவ சமுதாய மக்கள் சிந்திப்பதை நிறுத்தி விட்டீர்கள் என்பதுதான் எங்களுக்கெல்லாம் அச்சமாக இருக்கிறது,

ஏன் என்று சொன்னால் உங்களை எல்லாம் அப்படி மாற்றி இருக்கிறார்கள் சிறுபான்மை மக்கள் உங்களுக்கு எல்லாம் அ.தி.மு.க பாதுகாப்பாக இருக்கும் பாஜகவை பற்றி நீங்கள் எல்லாம் கவலைப்படத் தேவையில்லை அது ஒரு கட்சி அவர்கள் கொள்கை வேறு ஆகையால் நீங்கள் யாரும் அதைப்பற்றி கவலைப்பட வேண்டாம், ஆனால் அண்ணா தி.மு.க-வின் கொள்கை சிறுபான்மை மக்கள் உங்களை காக்கின்றது அதன் கொள்கை ஆகும். என்றும் உங்களுக்கு உறுதுணையாக முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி இருப்பார் என்று அரி பேசினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *