ஈபிஎஸ் பொன்விழாவை புண்விழாவாக மாற்றியவர்…. ‘ஒரிசினல் அதிமுக’ மருது அழகுராஜ் ஆவேசம்

முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் நியமித்த மாவட்ட செயலாளர்கள், நிர்வாகிகளின் ஆலோசனைக் கூட்டம் சென்னை வேப்பேரியில்  உள்ள தனியார் திருமண மண்டபத்தில் பண்ருட்டி ராமச்சந்திரன் தலைமையில் நடைபெற்றது.

இதில் ஜேசிடி.பிரபாகரன், வைத்தியலிங்கம் உள்ளிட்ட  88 மாவட்ட செயலாளர்கள், தலைமைக்கழக நிர்வாகிகள் என 500க்கும் மேற்பட்டவர்கள் பங்கேற்றனர்.

முன்னதாக மாவட்ட செயலாளர்கள் மற்றும் தலைமை கழக நிர்வாகிகளுக்கு மட்டுமே கூட்டம் நடக்கும் அறங்கத்திற்க்குள் அனுமதி என்று கூறப்பட்டதால் திருமண மண்டபத்திற்கு வெளியே தொண்டர்கள் குவிந்து இருந்தனர் ஒரு கட்டத்திற்கு மேல் பொறுமையை இழந்த தொண்டர்கள் கதவை தள்ளிக் கொண்டு உள்ளே வந்ததால் சிறிது நேரம் சலசலப்பு ஏற்பட்டது.

மருது அழகுராஜ் விழா மேடை பேச்சு அதிமுகவுக்கு இரண்டாம் ராமச்சந்திரனாக வந்துள்ளவர் பண்ருட்டி ராமச்சந்திரன். அரசியல் மூத்தவர் அவைத்தலைவராக இருக்கிறார். பூட்டிய வாடி வாசலை திறந்து காட்டியவர் ஓ.பன்னீர்செல்வம். இவர் 2026 ல் முதலமைச்சராக மீண்டும் முடிசூட்டுவார்…

வனவாசம் சென்ற ராமனுக்கு முதுமை வரவில்லை. அதேபோல் ஓபிஎஸ் எந்த சூழ்நிலையிலும் எதற்கும் பதறியதில்லை. எப்போதும் சிரித்துக்கொண்டே இருப்பவர்.

பொன்விழா காலத்தில் அதிமுகவை புண்விழாவாக மாற்றியவர் எடப்பாடி பழனிசாமி. கூட்டுவதற்கு வாளியோடு வந்து, விமானத்தில் குப்பை பெருக்குபவராக வந்தவர் எடப்பாடி பழனிசாமி.  விமானத்தை ஓட்டுவது எப்படி என புத்தகத்தை படித்து பைலட்டாகி விமானத்தை ஓட்டிய அந்த குப்பை பெருக்குபவர், ரெக்கை கட்டி பறந்தார். ஆனால் அவர் விமானத்தை இறக்கத் தெரியாமல் தத்தளிப்பது போல எடப்பாடி பழனிசாமி தடுமாறிக் கொண்டிருக்கிறார்.

எடப்பாடி பழனிசாமி பக்கம் டெண்டர் எடுத்தவர்கள் மட்டும் இருக்கிறார்கள். இயேசு கிறிஸ்துவிடம் ஐந்து வரங்கள் கேட்பதாகவும் கேபி முனுசாமியை பாமகவிற்கு அனுப்பிவிட வேண்டும் என்றும் உதயக்குமாருக்கு உண்மையைப் பேசக் கற்றுக்கொடு என்றும்  ஜெயக்குமாரை ஊமையாக்கி விடு என்றும் ,சிவி சண்முகத்துக்கு நிதானத்தை்கொடு என்றும்  எடப்பாடியை ஏழையாக்கி விடு என்ற வரம் வேண்டும் என்றார்….

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *