அதிமுக-விற்கு பிடித்த நோய்தான் எடப்பாடி மனோஜ் பாண்டியன் குற்றச்சாட்டு
முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் நியமித்த மாவட்ட செயலாளர்கள், நிர்வாகிகளின் ஆலோசனைக் கூட்டம் சென்னை வேப்பேரியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் பண்ருட்டி ராமச்சந்திரன் தலைமையில் நடைபெற்றது.
இதில் ஜேசிடி.பிரபாகரன், வைத்தியலிங்கம் உள்ளிட்ட 88 மாவட்ட செயலாளர்கள், தலைமைக்கழக நிர்வாகிகள் என 500க்கும் மேற்பட்டவர்கள் பங்கேற்றனர்.
முன்னதாக மாவட்ட செயலாளர்கள் மற்றும் தலைமை கழக நிர்வாகிகளுக்கு மட்டுமே கூட்டம் நடக்கும் அறங்கத்திற்க்குள் அனுமதி என்று கூறப்பட்டதால் திருமண மண்டபத்திற்கு வெளியே தொண்டர்கள் குவிந்து இருந்தனர் ஒரு கட்டத்திற்கு மேல் பொறுமையை இழந்த தொண்டர்கள் கதவை தள்ளிக் கொண்டு உள்ளே வந்ததால் சிறிது நேரம் சலசலப்பு ஏற்பட்டது.
விழா மேடையில் பேசிய மனோஜ் பாண்டியன், விசுவாசத்திற்கு அடையாளம் ஓ பி எஸ் அவர்கள் என்றும் அதிமுகவுக்கு பிடித்து இருக்கிற நோய் எடப்பாடி, அதற்கு மருந்து ஓபிஎஸ் எனவும் ஜானகி அம்மா விலகியதை போல நீங்களும் விலகி விடுங்கள் என்று கூறிய நய வஞ்சகர்கள் அவர்கள் என்றும் விமர்சனம் செய்தார்..
மேலும் பேசிய அவர் இவன் எது செய்தாலும் நான் ஏதிர்த்து நிற்பேன் என்று அன்று பொதுக்குழு கூட்டத்தில் நின்றவர் ஓ.பி.எஸ் எனவும் சோடா பாட்டில் தான் அரசியிலை உருவாக்கும் என்று சொல்வார்கள் ஆனால் அன்று வாட்டர் பாட்டிலை வைத்து அரசியல் உருவாகியதாகவும் அதிமுகவை காப்பாற்றும் ஒரே தலைவர் ஓ.பி.எஸ் தான் என்றும் எடப்பாடி பக்கம் உள்ளது டெண்டர் படை, ஓ.பி.எஸ், பக்கம் உள்ளவர்கள் தொண்டர் படை என்றும் ஓ.பி.எஸ், கட்டளை இட்டால் எடப்பாடி அணி என்று ஒன்று அங்கு இருக்காது என்றும் எச்சரிக்கை விடுத்தார்.