‘கடிகாரம் வாங்கின ரசீத காட்டு’ அண்ணாமலையை அலறவிட்ட அமைச்சர் செந்தில் பாலாஜி

பாஜக தலைவர் அண்ணாமலை தனது கை கடிகாரம் வாங்கியதற்கான பில்லை இன்று மாலைக்குள் வெளியிடுவாரா? மின்கட்டணம் உயர்வு,சொத்து வரி உயர்வு குறித்து மக்களிடம் கருத்து கேட்கும் அண்ணாமலை பெட்ரோல் டீசல் விலை உயர்வு,சிலிண்டர் மானியம் ரத்து குறித்தும் மக்களிடம் கருத்து கேட்பாரா என மின்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி கேள்வி எழுப்பியுள்ளார்.

மத்திய அரசு நிலக்கரி இறக்குமதிக்கு நிர்ணயம் செய்துள்ள விலையை விட குறைந்த அளவில் தமிழக அரசு நிலக்கரியை 133 டாலர் தான்  இறக்குமதிக்கு விலை நிர்ணயம் செய்யப்பட்டது. தமிழக அரசு சிறப்பாகவும் பல்வேறு துறைகளும் வெளிப்படையாக செயல்பட்டு வரும் நிலையில்  தேவையில்லாமல் குற்றச்சாட்டுகளை ஆதாரம் இல்லாமல் பாஜக தலைவர் பேசிய வருவதாக குற்றம் சாட்டினார் .

நான் கேட்ட கேள்வி வாங்கிய கடிகாரத்திற்கு பில் உள்ளதா என்று தான்.  தேர்தலுக்கு முன் வாங்கினாரா இல்லை பின்னரா என்றால் பில்லை காட்ட சொல்லுங்கள். மடியில் கணம் இல்லை என்றால் வழியில் பயம் இருக்காது. மடியில் கணம் உள்ளது.

நீ முதலில் உண்மையாக இரு. என்றும் தெரிவித்த செந்தில் பாலாஜி பாஜகவினர் வார் ரூம் போட்டு தொழிலதிபர்கள் மிரட்டப்படுகிறார்கள் என்ன குற்றம் சாட்டினார். மின்சார துறை மீதான குற்றச்சாட்டுகளில் உண்மை இருந்தால் மின்வாரியம் சரி செய்ய தயாராக இருக்கிறது.

பாஜக தலைவர் அண்ணாமலை முடிந்தால் இன்று மாலைக்குள் அந்த நபர் அந்த கடிகாரத்திற்கான ரசீதை வெளியிட வேண்டும் எந்த கடையில் எந்த விலைக்கு வாங்கினார் என்று, ஆதாரத்தை வெளியிட வேண்டும்.

மேலும் அந்த கடிகாரம் யாரிடமோ வெகுமதி வாங்கியது என்றும் அதற்கான பில்லை இன்று மாலை வெளியிட வேண்டும் என சவால் விடுத்தார்.அந்த கடிகாரத்திற்கான பில் தற்போது தயாரிக்கக்கூடிய பணிகள் நடைபெற்று வருவதாகவும் அதனை வெளியிடும்போது அடுத்தகட்ட குற்றச்சாட்டுகளை தான் தெரிவிப்பதாக கூறினார்

பாஜகவினர் எழுப்பிய கேள்வி குறித்த பதிலுக்கு தமிழகத்தில் இல்லாத ஒரு கட்சியில் உள்ள நபர்கள் எழுப்பக்கூடிய கேள்விகளுக்கு பதில் அளிக்க முடியாது என தெரிவித்தார்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *