ராகுல் காந்தியோடு இணையும் கமலஹாசன்… எம்.பி. எலக்ஷனுக்கு அடிபோடுகிறதா காங்கிரஸ்?
சென்னை அண்ணா நகரில் உள்ள தனியார் விடுதியில் நாடாளுமன்ற தேர்தலை எதிர்கொள்வது குறித்து மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமலஹாசன் தலைமையில் மாநில நிர்வாகிகள்,செயற்குழு,மாவட்ட செயலாளர்களின் ஆலோசனைக் கூட்டம் நடைப்பெற்றது .
இதையடுத்து செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமலஹாசன், நாடாளுமன்ற தேர்தலுக்கான முன்னேற்பாடுகள்,கட்சியின் கட்டமைப்புகள் உள்ளிட்ன பல முக்கிய முடிவுகள் ஆலோசனை கூட்டத்தில் எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.
கூட்டணி தொடர்பான கேள்விக்கு பதில் அளித்த அவர், எந்த திசையில் மக்கள் நீதி மய்யம் பயணிக்கிறது என்பது தன் பயணத்தை தெரிந்து கொண்டாலே தெரிய வரும் என கூறினார். ஆவின் பொருட்கள் தொடர் விலை ஏற்றம் குறித்து பதில் அளித்த அவர், தமிழக அரசு எந்த வித அத்தியாவசிய பொருட்களின் விலையை உயர்த்தக்கூடாது என தெரிவித்தார்
காவி ஆடை தொடர்பாக சர்ச்சை எழுந்து வரும் நிலையில் அதை குறித்த கேள்விக்கு அது நம்ம அரசியல் இல்லை என்று கூறினார் இதையடுத்து செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த மக்கள் நீதி மய்யம் துணைத் தலைவர் மௌரியா, யாத்திரை பயணத்தில் கலந்து கொள்வதற்க்கு ராகுல் காந்தி அழைப்பு அனுப்பிள்ளதாக கூறிய அவர், இந்த ராகுல் காந்தி தலைமையில் நடைபெறும் இந்திய ஒற்றுமை பயணத்தில் டெல்லியில் கமலஹாசன் கலந்து கொள்ள உள்ளதாக தெரிவித்தார்