தமிழ்நாட்டில் இரண்டு ஐ.பி.எஸ்-களால் பிரச்சனை, ஆளுநரையும், அண்ணாமலையையும் தாக்கும் எம்.எல்.ஏ

திருவள்ளூர் மாவட்டம், திருத்தணியில் திமுக முன்னாள் பொதுச்செயலாளர் பேராசிரியர் அன்பழகன் நூற்றாண்டு விழா பொதுக்கூட்டம் திருத்தணி சட்டமன்ற உறுப்பினர் எஸ்.சந்திரன் தலைமையில்  நடைபெற்றது.

இந்த பொதுக்கூட்டத்தில் திமுக-வின் துணை பொது பொதுச்செயலாளர் ஆ.ராசா கலந்துகொண்டு பேசுகையில்: 2 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னாள் சங்ககால பாடல்களில் இருபதுக்கும் மேற்பட்ட பெண் புலவர்களை கொண்டிருந்த சமூகம், இந்த சமூகம் திராவிட சமூகம். 

நாம் இந்துதான் என்று கூறுபவர்களுக்கு, பகவத் கீதை மற்றும் சமஸ்கிருதத்தை தூக்கி கொண்டாடுபவர்களுக்கு அண்ணாமலை மற்றும் வானதி சீனிவாசன் ஆகியோரை தமிழகத்திற்கு நேந்தி விட்டு உள்ளோம். உச்சநீதிமன்றத்தினுடைய தலைமை நீதிபதியாக இருந்து பாபர் மசூதி வழக்கை தீர்ப்பு வழங்கிய ரஞ்சன் கோகாயை ஓய்வு பெற்ற மறுநாளே நாடாளுமன்றத்துக்கு அனுப்பியதால் அவர் வழங்கிய தீர்ப்பின் மீது சந்தேகத்தை ஏற்படுத்துகிறது. 

தற்போது தமிழ்நாட்டில் இரண்டு ஐ.பி.எஸ்-களால் பிரச்சனை ஏற்பட்டுள்ளது. ஒன்று தமிழக பாரதிய ஜனதா கட்சியின் தலைவர் அண்ணாமலை, மற்றொன்று ஆளுநர் ரவி. இவர்கள் இருவர் எங்கு பயின்றார்கள் என்று தெரியவில்லை. திராவிடம் என்று ஒன்று இல்லை என்று கூறி வருகின்றனர், தேசிய கீதம் பாடலிலே திராவிடம் என்ற சொல் உள்ளது என தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *