உதயநிதி  மந்திரியானால் பாலாறும், தேனாறும் ஓடும்… வாயைக் கொடுத்து வாங்கிக்கட்டும் ஈபிஎஸ்

சேலம் கிழக்கு மாவட்ட திமுக சார்பில் எளம்பிள்ளையில் நடைப்பெற்ற பேராசிரியர் நூற்றாண்டு நிறைவு விழா கூட்டத்தில் கிழக்கு மாவட்ட செயலாளர் எஸ்.ஆர்.சிவலிங்கம்… உதயநிதி ஸ்டாலின் மந்திரியானால் பாலாறும், தேனாறும் ஓடுமா? என எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமியின் பேச்சுக்கு ஓடிக் கொண்டுதானே உள்ளது என பதிலடி கொடுத்தார்….

சேலம் கிழக்கு மாவட்ட திமுக சார்பில் இனமான பேராசிரியர் அவர்களின் நூற்றாண்டு நிறைவு விழா பொதுக்கூட்டம் வீரபாண்டி ஒன்றியம் எளம்பிள்ளை சந்தப்பேட்டை திடலில் சேலம் கிழக்கு மாவட்ட செயலாளர் எஸ்.ஆர்.சிவலிங்கம் தலைமையில் நடைபெற்றது. 

கூட்டத்தில் எஸ்.ஆர்.சிவலிங்கம் பேசும்போது திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் அமைச்சரானால் தேனாறும், பாலாறும் ஓடுமா?  என எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமியின் பேச்சுக்கு திமுக ஆட்சி பொறுப்பேற்றதிலிருந்து மழை பொழிந்து தேனாறும் பாலாறும் ஓடி கொண்டு தானே உள்ளது என பதிலடி கொடுத்தார். 

மேலும் இந்தியாவிலேயே சிறந்த முதலமைச்சர் தமிழக முதலமைச்சர் தளபதி ஸ்டாலின் எனவும், இனமான பேராசிரியர் முத்தமிழ் அறிஞர் கலைஞரை விட இரண்டு வயது அதிகமாக இருந்தாலும் பெருந்தன்மையோடு நடந்து கொள்வார் எனவும் ஆகவே முதலமைச்சர் தளபதி ஸ்டாலின் உத்தரவு படி 100 கூட்டங்கள் நடுத்த வேண்டும் என்று அறிவித்ததில் இந்த கூட்டமும் ஒன்று எனவும் பேசினார். 

அப்போது வீரபாண்டி ஒன்றிய செயலாளர் வெண்ணிலா சேகர், தலைமை கழக பேச்சாளர் உடுமலை தண்டபாணி, திமுக துணை அமைப்பு செயலாளர் தாயகம் கவி உட்பட கிழக்கு மாவட்ட திமுக நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *