மின்சாரத்தை தொட்டா இல்ல, கேட்டாலே ஷாக்கடிக்குது… நத்தம் விஸ்வநாதன் நையாண்டி
சென்னை செல்வதற்காக திண்டுக்கல் மாவட்டம் நத்தத்திலிருந்து மதுரை விமான நிலையத்திற்கு வந்த அதிமுக முன்னாள் அமைச்சர் நத்தம் விஸ்வநாதன் மதுரை விமானத்தில் செய்தியாளரை சந்தித்தார்.
திமுக ஆட்சியில் ஆவின் பால் விலை உயர்வு மட்டும் அல்ல, எல்லாமே விலை உயர்வு தான். வாழ்விலேயே கூட்டியது மட்டுமல்லாமல் ஆவினை வெண்ணெய் உள்ளிட்ட அனைத்து பொருட்களின் விலையையும் உயர்த்தி உள்ளனர். திமுக ஆட்சிக்கு வருவதற்கு முன் வரியை குறைப்போம் வசதியை பெருக்குவோம் என்று வசனம் பேசிவிட்டு இன்றைக்கு வரியை குறைக்க வேண்டாம் ஆனால் உயர்த்தாமல் இருந்திருக்கலாம்.
அதிமுக மின்சாரத்துறையில் தன்னிறைவு பெற்ற மாநிலமாக மாற்றியது அம்மாவின் ஆட்சியில் தான், எதிர் கட்சி தலைவராக இருந்த தற்போதைய முதல்வர் மு.க.ஸ்டாலின் அன்றைக்கு மின்சாரத்தை தொட்டால் தான் சாக் அடிக்கும். ஆனால், மின் கட்டணத்தை பார்த்தாலே சாக்கடிக்கிறது என்று ஏக வசனம் பேசியவர். இன்றைக்கு மின்சார கட்டணத்தை பன்மடங்கு உயர்த்தி உள்ளனர். ஆண்டுதோறும் மின்சார கட்டணம் ஆறு சதவீதம் உயர்த்தப்படும் என்று அரசனையும் அறிவித்துள்ளனர். திமுக ஆட்சிக்கு திமுக அரசே முடிவுரை எழுதிக் கொண்டிருக்கிறார்கள்.