ஜெயலலிதா மரணம் குறித்து பேச அருகதை இல்லை… அதிமுகவை விலாசிய அமைச்சர்
முன்னாள் முதல்வர் ஜெயலலிதா இரும்புப் பெண்மணி என்று கூறுகிறார்கள் அவர் இறப்பதற்கு முன்பு வெளிநாட்டிற்கு சிகிச்சைக்கு அழைத்துச் செல்ல வேண்டும் என்று ஜெயலலிதாவிடம் மருத்துவர்கள் கூறினார்கள் அவரும் ஒப்புக்கொண்டார்.
அவரை வெளிநாட்டிற்கு அழைத்துச் செல்லாமல் அவரது இறப்பிற்கு காரணமான முன்னாள் மருத்துவத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், சசிகலா மற்றும் அதற்கு துணையாக இருந்தவர்களை அதிமுகவினர் அடிக்க வேண்டும் ஜெயலலிதாவின் மரணத்திற்கு காரணமானவர்களை பக்கத்தில் வைத்துக் கொண்டு ஜெயலலிதா மரணம் குறித்து பேச உங்களுக்கு என்ன அருகதை உள்ளது. அப்படிப்பட்ட ரகசிய ஆட்சியா இப்போது நடந்து கொண்டிருக்கிறது.
சட்டம் ஒழுங்கு சரியில்லை என்று சொல்கிறார்கள் அதிமுக ஆட்சியில் தூத்துக்குடியில் குருவி சுடுவது போல் மக்களை சுட்டார்களே அதுபோலவா தற்போது நடக்கிறது. தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவம் குறித்து நிமிடத்திற்கு நிமிடம் அப்போதைய முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கு உளவுத்துறையினர் தகவல் கொடுத்துள்ளனர் என்று அருணா ஜெகதீசன் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அமைதியை நிலை நாட்டுவதில் இந்தியாவிலேயே தமிழகத்தை முதல் இடத்திற்கு கொண்டுவர முதல்வர் பாடுபட்டுக் கொண்டிருக்கிறார்…. புதுக்கோட்டை மாவட்டம் திருமயத்தில் முன்னாள் திமுக பொதுச்செயலாளர் அன்பழகன் நூற்றாண்டு நிறைவு விழா பொதுக்கூட்டத்தில் தமிழக சட்டத்துறை அமைச்சர் ரகுபதி பேச்சு.