அனைத்து நீதிமன்றங்களிலும் அம்பேத்கர் சிலையை நிறுவக்கோரி சிவசேனா கட்சியினர் போராட்டம்
தமிழகத்தில் உள்ள அனைத்து நீதிமன்றங்களிலும் அண்ணல் அம்பேத்கர் சிலையை நிறுவக்கோரி பாரத பிரதமர் முதலமைச்சருக்கு சிவசேனா கட்சியினர் தபால் அனுப்பும் போராட்டம்.
தேனி மாவட்ட சிவசேனா கட்சி சார்பாக தமிழகத்தில் உள்ள அனைத்து நீதிமன்றங்களிலும் சட்ட மேதை அண்ணல் அம்பேத்கர் சிலையை நிறுவ வேண்டும் என தபால் அனுப்பும் போராட்டம் நடைபெற்றது.
இதில் தேனி பெரியகுளம் சாலையில் உள்ள தலைமை தபால் நிலையத்தில் ஒன்றுகூடிய சிவசேனா கட்சியினர், சாதி மத வேறுபாடின்றி அனைத்து சாமானியர்களும் வாக்குரிமை பெற்றுத் தந்த சட்ட மேதை அண்ணல் அம்பேத்கரை போற்றும் விதமாக
தமிழகத்தில் உள்ள அனைத்து நீதிமன்றங்களிலும் அம்பேத்கர் உருவ சிலையை நிறுவ வேண்டும் என கூறி பாரத பிரதமர், ஜனாதிபதி, தமிழக முதல்வர், தமிழக ஆளுநர், மத்திய மாநில சட்ட அமைச்சர்கள் ஆகியோருக்கு கடிதம் அனுப்பப்பட்டது.