மின் இணைப்புடன் ஆதார் எண்ணை இணைப்பது ரொம்ப கன்பியூஸா இருக்குரு…! முன்னாள் அமைச்சர் தங்கமணி
மின் இணைப்புடன் ஆதார் எண்ணை இணைக்கும் செயலில் பொதுமக்களுக்கு தெளிவான விளக்கங்களை மின்வாரியத் துறை சார்பில் இதுவரை அளிக்கப்படவில்லை, அதிமுக ஆட்சிக்காலத்தில் கடந்த ஏழு ஆண்டுகளாக மின்கட்டணம் உயர்த்தப்பட்ட நிலையில் தற்போது திமுக அரசு மின் கண்டனத்தை உயர்த்தி உள்ளது தமிழகத்தில் 2011 ஆம் ஆண்டு அதிமுக ஆட்சி பொறுப்பேற்ற இரண்டு ஆண்டுகளில் தடையில்லா மின்சாரத்தை வழங்கினோம்
மின்வாரித்துறை சார்பில் பொதுமக்களுக்கு வழங்கப்பட்ட இலவச நூறு யூனிட் மின்சார உள்ளிட்ட இலவசத்தை தடை செய்வதற்காக திமுக முயற்சி மேற்கொண்டு வருகிறது
சொத்து வரி மின் கட்டண உயர்வு உள்ளிட்ட விலைவாசி உயர்வுக்கு திமுகவிற்கு மக்கள் நாடாளுமன்றத்தில் தக்க பாடத்தை புகட்டுவார்கள் என கூறினார் மதுவிலக்கு துறையில் மது விற்பனையாளர்கள் பணியிடை நீக்கம் செய்துவதை கைவிட்டுவிட்டு அம்பு எய்தவர் யார் என நடவடிக்கை எடுக்க வேண்டும்
தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் அதிகார போதையில் இருப்பதால், மக்கள் மத்தியில் அரசு குறித்து இருக்கும் அவப்பெயர்களை காவல்துறையினர் சரியாக தெரிவிப்பதில்லை மக்களும் கோபத்திற்கு ஆளாகியுள்ளனர் என்பதும் முதல்வருக்கு தெரியவில்லை இதற்கெல்லாம் நாடாளுமன்றத் தேர்தல் வரும்போது நிச்சயமாக பதில் கிடைக்கும்
நாடாளுமன்றத் தேர்தலுக்குப் பிறகு ஆட்சியின் மீது இருக்கும் அவ பெயர் குறித்து திமுக உணரும்
திமுகவில் உழைத்தவர்களுக்கு உரிய அங்கீகாரம் கிடைக்கவில்லை என ஆர் எஸ் பாரதி உள்ளிட்ட அமைச்சர்கள் கூறுவதாக பத்திரிகையாளர்கள் கேள்வி எழுப்பியதற்கு அப்போது அதற்கு முன்னால் அமைச்சர் தங்கமணி அண்ணா திமுக ஆட்சி நடைபெறுவதற்கு சான்றாக இருப்பதாக கூறினார்