‘புதுச்சேரி வெளிச்சமாக இருக்கிறது’, மின் துறை தனியார் மயமாக்கலை பற்றி தமிழிசை
புதுச்சேரி ஆளுநர் தமிழிசை செளந்தரராஜன் கோயமுத்தூர் வருகை தனியார் பல்கலைக்கழக நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்கும் முன் செய்தியாளர்களை சந்தித்தார்.
புதுச்சேரி மாநிலம் வெளிச்சமாக இருக்கின்றது. 4 மணி நேரம் மட்டுமே மின்சாரம் இல்லாமல் பாதிப்பு. அதுவும் சிலர் செய்த பிரச்சினை காரணமாக தடைபட்டது. உடனே மாற்று நடவடிக்கை எடுக்கப்பட்டது
போராட்டம் வாபஸ் பெற்றது மகிழ்ச்சி. தனியார் மயமாக்கல் என்றதும் முழுவதுமாக கொடுத்துவிடுவதாக நினைத்து விட்டார்கள் பல துணைநிலை மாநிலங்களில் தனியாருக்கு கொடுக்கப்பட்டு இருக்கின்றது. இதனால் வேண்டிய அளவிற்கு மின்கட்டணம் குறைக்கப்படும்.24 மணி நேரமும் சிறப்பான செயல்பாடு இருக்கும்
மின் ஊழியர்கள், அதிகாரிகள் பணி எந்த விதத்திலும் பாதிக்கப்படாது. மக்கள் நலன் சார்ந்து எடுக்கப்பட்ட முடிவுதான். மின் திருட்டு தடுக்கப்படுதால் சிலர் போராட்டங்களை தூண்டி இருக்கலாம்
ஊழியர், அதிகாரிகள் பதவி உயர்வு பாதிக்கப்படாது கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என சொன்னது, பொதுமக்கள் பாதிக்க கூடாது என்பதற்காகதான் ஊழியர், அதிகாரிகளின் நடவடிக்கையால்
புதுவை மாடல் இன்று உயர்ந்த மாடலாக இருக்க போகின்றது. மாடல் என்பதை விட புதுவை மாதிரி என்றுதான் சொல்லனும்.
சுற்றுலா பயணிகள் மத்தியில் அச்சம் ஏற்பட்டது உண்மை. ஆனாலும் உடனடியாக மின் பிரச்சினை சரி செய்யப்பட்டது ஊழியர்களின் போராட்டம் திரும்ப வருமா என இனிதான் பார்க்கனும்.
இயக்குனர் வெற்றிமாறனுக்கு கமலஹாசன் ஆதரவு கொடுத்து இருப்பது குறித்த கேள்விக்கு, தஞ்சை
பெரியகோவிலை பார்த்து வளர்ந்தவள் நான். அடையாளங்களை மறைக்க பார்க்கின்றனர். கலாச்சார அடையாளங்களை மறைப்பதை எல்லோரும் எதிர்த்து குரல் கொடுக்க வேண்டும் இந்து கலாச்சார அடையாளத்தை தேவைக்காக திருப்பி கொண்டால் ஏற்று கொள்ள முடியாது
தமிழர்களின் அடையாளம் இறை வழிபாடு. சைவம், வைணவமும் இந்து மதத்தின் அடையாளம் அடையாளத்தினை மறைக்க முற்படுகின்றனர். அடையாளங்களை முற்பட்டால் அதுசரியாக இருக்காது என்றார தமிழிசை சௌந்தராஜன்.