பசும்பொன் முத்துராமலிங்கத்தேவரின் தலைகவசத்திற்கும் பஞ்சாயத்து செய்யும் அதிமுக

பசும்பொன் முத்துராமலிங்கத்தேவரின் சிலைக்கு அதிமுக சார்பில் அளிக்கப்பட்ட தங்க கவசத்திற்கு ஒபிஎஸ் சார்பில் உரிமைகோரி தனியார் வங்கியில் மனு

பசும்பொன்னில் உள்ள முத்துராமலிங்கதேவர் சிலைக்கு அதிமுக சார்பில் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா கடந்த 2014-ம் ஆண்டு 3.7 கோடி ரூபாய் மதிப்பில் 13 கிலோ எடையுள்ள தங்க கவசத்தை அளித்திருந்தார். மதுரை அண்ணாநகரில் உள்ள தனியார் வங்கி பெட்டகத்தில் வைத்து பாதுகாக்கப்பட்டு வருகிறது.

அதிமுகவின் பொருளாளராக என்ற அடிப்படைடையில் ஓ.பன்னீர்செல்வம்  ஒவ்வொரு ஆண்டும் முத்துராமலிங்கத்தேவர் குருபூஜை விழாவின் போது வங்கிக்கு நேரில் வந்து கவசத்தை பெற்று முத்துராமலிங்கத் தேவர் நினைவிட பொறுப்பாளர்களிடம் ஒப்படைத்து, குருபூஜை முடிந்த பின்னர் அதனை மீண்டும் பெற்று வங்கியில் ஒப்படைத்து வழக்கம்.

இந்த தங்க கவசத்துக்கு உரிமை கோருவதற்காக கடந்த செப்.16 அன்று எழுத்துப்பூர்வ கடிதத்தை அதிமுக சார்பில் வங்கி நிர்வாகத்திடம் அளித்திருந்தனர். அக்டோபர் 30-ம் தேதி தேவர் குருபூஜை நடைபெற உள்ள நிலையில் பொருளாளராக நியமிக்கப்பட்ட திண்டுக்கல் சீனிவாசன்  கடந்த வாரம் வங்கிக்கு நேரில் வந்து கவசத்திற்கு உரிமை கோருவதற்கான பிரமாண பத்திரத்தை தாக்கல் செய்தார்.

இந்நிலையில் தர்மர் எம்பி,ஜயப்பன் எம்.எல்.ஏ , மதுரை மாவட்ட செயலாளர் கோபாலகிருஷ்ணன் உள்ளிட்டவர்கள் வங்கிக்கு நேரில் வந்து தங்க கவசத்திற்கு உரிமை கோரி மனு தாக்கல் செய்துள்ளனர். வங்கி நிர்வாகம் பரிசீலனை செய்து  தங்க கவசத்தை யாரிடம் ஒப்படைப்பது குறித்து முடிவெடுக்கும் என தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *