ஊர்வலத்திற்கு தடை – உயர் நீதிமன்றத்தில் ஆர்.எஸ்.எஸ். முறையீடு!

தமிழகத்தின் பல்வேறு மாடங்களிலும் ஆர்எஸ்எஸ் ஊர்வலத்திற்கு காவல் துறையினர் அனுமதி மறுத்தது தொடட்பாக உயர் நீதிமன்றத்தில் அந்த அமைப்பு சார்பில் முறையீடு செய்யப்பட்டுள்ளது.

மகாத்மா காந்தியின் பிறந்தநாளான அக்டோபர் 2ம் தேதி அன்று தமிழகம் முழுவதும் ஊர்வலம் நடத்த ஆர்எஸ்எஸ் திட்டமிட்டிருந்தது. இதற்கு பல்வேறு நிபந்தனைகளுடன் சென்னை உயர் நீதிமன்றம் அனுமதி அளித்திருந்தது. இந்த உத்தரவை திரும்ப பெற கோரி விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். இந்த மனுவை அவசர வழக்காக விசாரிக்க வேண்டும் என்று அவர் தரப்பில் முன்வைக்கப்பட்ட முறையீட்டை தனி நீதிபதி இளந்திரையன் ஏற்க மறுத்து விட்டார். உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இந்நிலையில் சட்ட ஒழுங்கு பிரச்சனையை சுட்டிக்காட்டி, கடலூர், திருப்பூர், விழுப்புரம், நாமக்கல் உள்ளிட்ட மாவட்டங்களில் ஆர்எஸ்எஸ் பேரணிக்கு அனுமதி அளிக்க முடியாது என காவல்துறை மறுப்பு தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக ஆர்எஸ்எஸ் சார்பில் சற்று நேரத்திற்கு முன்பு சென்னை உயர் நீதிமன்றத்தில் முறையீடு செய்யப்பட்டுள்ளது.

நீதிபதி இளந்திரையன் முன்பு ஆர்எஸ்எஸ் தரப்பு வழக்கறிஞர்கள் எஸ்.பிரபாகரன், மனோகர், சந்திரசேகர் ஆகியோர் ஆஜராகி முறையிட்டனர். இதனை ஏற்றுக்கொண்ட நீதிபதி, அவமதிபு மனுத்தாக்கல் செய்யுங்கள் என ஆர்எஸ்எஸ் அமைப்பு தரப்பு வழக்கறிஞருக்கு அறுவுறுத்தியுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *