செங்கல் போல தபால் பெட்டி வைத்து எய்ம்ஸ் கட்டி விட்டதாக கப்சா விடும் பாஜக
மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை திட்டபணிகள் துவங்காத நிலையில் ஒன்றிய அரசு பரபரப்பாக செயல்படுவது தபால் பெட்டி வைத்துள்ளனர்.
மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் தாலுகா தோப்பூரில் கடந்த 2019ல் பிரதமர் மோடியால் மருத்துவமனைக்கு அடிக்கல் நாட்டப்பட்டது அதனைத் தொடர்ந்து ஜப்பானிய ஜெயிக்கா நிறுவனத்துடன் இணைந்து 1274 கோடி ரூபாய் செலவில் கட்டுமான திட்டத்திற்கான ஒப்புதல் பெறப்பட்டு நிலுவையில் உள்ளது
இந்நிலையில் கூடுதல் நிதி ஒதுக்கீடாக 1974 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டது ஆனாலும் ஒன்றிய அரசின் அமைச்சரவை கூட்டத்தில் ஒப்புதல் பெறாமல் நிலுவையில் உள்ள நிலையில் சமீபத்தில் மதுரை வந்த பாஜக தேசிய தலைவர் ஜே பி நட்டா மதுரை எய்ம்ஸ் பணி நிறைவுற்றதாக கூறி விரைவில் திறப்பு விழா நடைபெறும் எனக் கூறி சர்ச்சையை கிளப்பினார்.
அங்கு விருதுநகர் மதுரை நாடாளுமன்ற உறுப்பினர்கள் மாணிக்கம் தாகூர் சு வெங்கடேசன் ஆகியோர் ஆய்வு செய்து எவ்வித கட்டிட பணியும் நிறைவில்லை என செய்தியார்களை சந்தித்தனர்
சுற்று சுவர்மட்டுமே கட்டி முடிக்கப்பட்ட நிலையில் அங்கு அலுவலகம் செயல்படுவது போல் தபால் பெட்டி ஒன்று வைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.