“எங்கள தாண்டி தொட்ரா” பெரியார் பிறந்தநாளில் கெத்துகாட்டும் திமுக
கோவையில் திமுக சார்பில் பெரியார் பிறந்த நாளை முன்னிட்டு சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளது. அதில் “எங்களை தாண்டி தமிழ்நாட்டை தொட்ரா பார்க்கலாம்” என்று பெரியார், அண்ணா, கருணாநிதி,ஸ்டாலின் புகைபடங்களுடன் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளது.
கோவையில் உணவகத்திற்கு தந்தை பெரியார் பெயர் சூட்டியதால் தாக்குதல் நடத்திய இந்து முன்னனியினர் குண்டர் சட்டத்தில் கைது செய்ய ப்பட்டனர
கோவை காரமடை கண்ணார்பாளையம் பகுதியில் உணவகத்திற்கு “தந்தை பெரியார் உணவகம்” என பெயர் சூட்டியதற்கு எதிர்ப்பு தெரிவித்து இந்து முன்னனியை சேர்ந்த 6 பேர் கடையை அடித்து உடைத்ததோடு, உரிமையாளர் மற்றும் அவரது தாயாரை தாக்கினர்.
இந்த வழக்கில் இந்து முன்னனியை சேர்ந்த 6 பேர் கைது செய்யப்பட்ட நிலையில், அவர்களை குண்டர் தடுப்பு சட்டத்தில் அடைக்க கோரி திராவிடர் பண்பாட்டு கூட்டியக்கத்தினர் மாவட்ட எஸ்.பி மற்றும் ஆட்சியரிடம் மனு அளித்துள்ளனர். மேலும் இவர்கள் மீது பல்வேறு வழக்குகள் உள்ளதால், குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்யப்பட்டனர்